சேலம், மார்ச் 29- எடப்பாடி அருகே அருந்ததிய பெண்ணை அடித்து அரை நிர்வா ணமாகிய கறிக்கடை உரிமையா ளரை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆடையூர் கிராமம், வண் ணாங்குட்டை பகுதியைச் சேர்ந்த வர் கறிக்கடை உரிமையாளரான மாதையன். இவர் அதேபகுதியில் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்த அருந்ததிய பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளார். இதுகு றித்து பூலாம்பட்டி காவல் நிலையத் தில் புகார் அளித்தும், காவல் துறை யினர் கட்டப்பஞ்சாயத்து செய் யவே முற்படுவதாகவும், தலித் பெண் களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, அருந்ததிய பெண் மீது சாதிய வன்மத்தோடு தாக்கு தல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தப்பட்டது. முன்னதாக, சிபிஎம் எடப்பாடி தாலுகா செயலாளர் மு.பெரியண் ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, எஸ்.கே.சேகர், ஜி.கணபதி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம். தேவி, ஜி.கவிதா, ஒன்றிய செயலா ளர்கள் கே.ராஜாத்தி, எஸ்.முத்து சாமி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.