நாமக்கல், மே 5- புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து மர்ம நபர் கள் ரூ.4.90 லட்சத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தி ரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள் கோவில்மேடு பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்குள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தில், சுமார் 8 வருடங்களாக லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக தினந்தோ றும் காலை மற்றும் மாலையில் ஏ.டி.எம். மையத்தை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் அதே பகு தியை சேர்ந்த முதியவர் கணேசன் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் வியாழனன்று அதி காலை 5 மணி அளவில் கணேசன் வழக்கம்போல் ஏ.டி.எம் மையத்தை சுத்தம் செய்யச் சென்றார். அப் போது அங்கிருந்த ஏ.டி.எம் இயந்தி ரம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத் திற்கு வந்த போலீசார், உயர் அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். அதைத் தொடர்ந்து வந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசார ணையில், கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். இயந்திரம் வெட்டி உடைக் கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 லட் சத்து 89 ஆயிரத்து 900 கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், மையத்தின் நுழைவாயி லில் இருந்த எச்சரிக்கை ஒலிப்பா னின் ஒயரை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 3 மணியில் இருந்து 4 மணிக்குள் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் நடந்திருக்க லாம் என போலீசார் கருதுகின்ற னர். தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசா ரணை நடத்தினார். கொள்ளையர் களை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்து அவர் நடவடிக்கை எடுத்தார். மேலும், தடயவியல் துறை காவல் துணை கண்காணிப் பாளர் யுக்கேஷ் ஏ.டி.எம் மையத் தில் உள்ள தடயங்களை சேக ரித்தார். சம்பவம் தொடர்பாக வணிக வளாக கட்டிடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு புதுச்சத்திரம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.