கோவை, ஜன.30- கோவைபுதூரில் புதிதாக சுவாதி ஹோமியோ கிளி னிக்கை, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார். கோவைபுதூரில் புதிதாக சுவாதி ஹோமியோ கிளினிக் திறப்பு விழா அண்மையில் கோவைப்புதூர் நடேசன் நக ரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சுவாதி ஹோமியோ கிளி னிக் மருத்துவர் ஆர்.எஸ்.நிரஞ்சனா தலைமை வகித்தார். கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் புதிய ஹோமியோ கிளினிக்கை துவக்கி வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சி. பத்மநாபன், மூத்த தோழர் எஸ். கருப்பையா, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வழக் கறிஞர் டி.சுதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிதாக திறக் கப்பட்டுள்ள சுவாதி ஹோமியோ கிளினிக்கில் மூட்டு வலி, தோல் நோய்கள், செரிமானக் கோளாறுகள், கீழ் வாதம், சிறு நீர் பாதை தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு மூத்த குடிமக்களுக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும் எனவும் சிகிச்சை தேவைப்படுவோர் முன்பதிவிற்கு 98940 39114 என்ற இந்த மொபைல் எண் ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மருத்துவர் ஆர்.எஸ். நிரஞ்சனா தெரிவித்தார்.