கோவை, டிச.23- தண்ணீர் பந்தல் பகுதியில் கால்வாயில் பாலம் அமைத்திட்டால் பயணம் எளிதாக மாறும் என்கிற கோரிக்கையை ஏற்று ரூ.34.50 லட்சம் நிதியை பி.ஆர்.நடராஜன் எம்பி., ஒதுக் கீடு செய்தார். கோவை மாநகராட்சி, 24 ஆவது வார்டு, தண்ணீர் பந்தல் ராகவேந்திரா நகர் பகுதியில் இருந்து பீளமேடு பகுதிக்கு செல்வதற்கு 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி யுள்ளது. இப்பகுதியில் பாலம் கட்டினால் அனைத்து பகுதி மக்களுக்கும் பயன்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி., பொதுமக்களின் கோரிக்கையின் நியா யத்தை உணர்ந்து உடனடியாக இதற்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்தார். பின்னர். தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.34.50 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்தார். இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டது. முன்னதாக, பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது வார்டு கோவை மாமன்ற உறுப்பினர் பூபதி தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், 26 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளி யங்கிரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், மதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி, ராகவேந்திரா நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.