உதகை, செப்.17- இரண்டாவது சீசனுக் காக தயாராகி வரும் உலகப் புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 15,000 பூந்தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள், இம்மாத இறுதி யில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் காட்சிப்படுத் தப்படுகிறது என பூங்கா நிர்வாகம் அறிவித் துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப் படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச் சமயங்களில் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை தருவார்கள். அவ்வாறு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், பூனா, பெங்களூரு போன்ற இடங் களில் இருந்து இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுணியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகை யான விதைகள் பெறப்பட்டு, பூங்காவி லேயே விதைகள் உற்பத்தி செய்து நடவு செய்யப்பட்டு 4 லட்சம் வண்ண மலர் செடிகள் பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் கண்ணாடி மாளிகையின் முன்பு 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட சால்வியா, டெய்சி, டெல் பினியம், டேலியா, லில்லி ஆலந்தூரியம் போன்ற 30 வகையான செடிகளில் பல்வேறு வண்ணங்களில் தற்போது பூக்க துவங்கி யுள்ளன. இதனை பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தும் புகைப் படங்கள் எடுத்தும் செல்கின்றனர். அதே போல் பச்சை பசேல் என காட்சியளிக்கும் மிகப்பெரிய பரப்பளவில் கொண்ட புல் மைதானத்தையும் சீரமைக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். இதனிடையே இரண்டாவது சீசனுக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரியும் நிலையில், தற்போது பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை இம்மாத இறுதியில் சுற்றுலா பயணிகளின் பார்வைக் காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளதாக பூங்கா நிர் வாகம் தெரிவித்துள்ளது.