districts

img

எல்லைப் பிரச்சனைகள் அமைதியாக  தீர்வுகாண இந்தியா-சீனா முடிவு

 புதுதில்லி,டிச.22- எல்லை தொடர்பான பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. இந்தியா-சீனா இடையிலான 22-வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் தில்லியில் இரு தினங்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனா சார்பாக வெளி யுறவுத்துறை அமைச்சர் வாங் யீ  ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஞாயிறன்று நடை பெற்ற இந்த கூட்டத்தில், எல்லை தொடர்பான பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் முடிவெடுத்துள் ளன. எல்லையில் நிற்கும் இரு நாட்டு வீரர்களிடையே, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கவும் இந்த அமர்வில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.  இது குறித்து சீன வெளி யுறவுத்துறை அமைச்சர் வாங் யீ  கூறுகையில், பல்வேறு தளங் களில் இந்தியா, சீனா இணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இருநாட்டின் தலைவர்களிடமும் புதிய பார்வை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.