districts

img

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தமுஎகச சார்பில் புத்தக வெளியீடு

அவிநாசி, ஏப்.24 – உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க அவிநாசி  கிளை சார் பில் புத்தக வெளியீடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தனியார்  திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  அவிநாசி கிளை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு,  அதிர்வுகள் கலைக்குழு சார்பில் கலை நிகழ்ச்சிகள், கவிதை  வாசிப்பு, அரசு கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் குறும்ப டத்தில் நடித்தவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், கார்த்திகேயன் இயக்கிய அமுது என்ற குறும்ப டத்தை எழுத்தாளர் சம்சுதீன்ஹீரா வெளியிட்டார். பேராசிரியர்  மணிவண்ணனின் திசையை உடைக்கும் சொல் நூலினை ஆசிரியர் சுசீலா அறிமுகம் செய்து வைத்தார்.  நீரோடை மகே ஷின் மௌனம் திறந்த நாற்காலி நூலை ஆசிரியர் காயத்ரி  அறிமுகம் செய்தார்.  இதனைத் தொடர்ந்து, சிறார்கள் எழுத்தாளர் சங்க மாநி லத் தலைவர் உதயசங்கர் எழுதிய குழந்தைகளுக்கான   நூலை சரிதா ஜோ அறிமுகம் செய்துவைத்தார். இதைய டுத்து சிறார்கள் எழுத்தாளர் சங்கத்தின் 13 பேர் கொண்ட அவி நாசி கிளை செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். இதில், தலைவராக நீரோடை மகேஷ், செயலாளராக சம்பத்குமார், பொருளாளராக சுசிலா ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். இந்த நிகழ்வில் ரமேஷ், அருண், ராஜேந்திரன், சம்பத் குமார், தினகரன், சாமியப்பன், கனகராஜ் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.