districts

img

வேலன் ஹோட்டல் மைதானத்தில் புத்தகத் திருவிழா பணிகள் தொடக்கம்

திருப்பூர், ஜன.11- திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற உள்ள வேலன்  ஹோட்டல் மைதானத்தில் தூய்மைப்படுத்தி அரங்குகள் அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், பின்னல்  புக் ட்ரஸ்ட் இணைந்து 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவி ழாவை வரும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம்  தேதி வரை 10 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இந்த புத்தகத் திருவிழாவை திருப்பூர் காங்கேயம் சாலை  வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடத்துவதென மாவட்ட  நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்த இடம் ஆய்வு செய்யப் பட்டு, தேர்வு செய்யப்பட்டவுடன் மாநகராட்சி நிர்வாகத் தின் மூலமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூய்மைப் படுத்தும் பணி தொடங்கப்பட்டது. விரைவாக மேற்கொள் ளப்பட்ட இப்பணியை தொடர்ந்து பிரம்மாண்டமான இந்த மைதானம் பளிச்சென காட்சி அளிக்கிறது. திருப்பூரில் புத்தகத் திருவிழா நடைபெற துவங்கி சுமார்  20 ஆண்டுகளில் இம்முறை நடத்தப்படும் வேலன் ஹோட்டல்  மைதானமே மிகப்பெரியதாகும். இங்கு விசாலமான அரங்கு கள், மாலை நேர கருத்தரங்கம் நடத்துவதற்கான மிகப்பெரும்  திடல் மற்றும் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களை தாராள மாக நிறுத்துவதற்கான வசதி என அனைத்து வகையிலும் சிறப் பானதாக இந்த இடம் அமைந்துள்ளது. இந்த மைதானம் தூய்மை செய்யப்பட்ட நிலையில், கண் காட்சி அரங்குகளை அமைப்பதற்கான வேலையும் தொடங்கி  விட்டது. 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா அனைத்து வகையிலும் வெற்றி பெறக்கூடிய முறையில் பணிகள் துரி தமாக நடைபெற்று வருவதாக புத்தகத் திருவிழா ஏற்பாட் டாளர்கள் தெரிவித்தனர்.