districts

img

மேட்டுப்பாளையத்தில் புத்தக திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம், ஆக.24- மேட்டுப்பாளையத்தில், 4  ஆவது புத்தக திருவிழா உற்சாகத் துடன் துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் 4 ஆவது புத்தக திரு விழா மேட்டுப்பாளையம் கோ - ஆப ரேட்டிவ் காலனியில் உள்ள இஎம் எஸ் திருமண மண்டபத்தில் வெள் ளியன்று துவங்கியது. இதனை நகர மன்றத் தலைவர் மெஹரீபா  பர்வீன் அஷ்ரப் அலி, மேட்டுப் பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா, தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகை செல்வன் உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். இதில், 50 க்கும் மேற்பட்ட அரங் குகளில் அறிவியல், அரசியல், இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், நாவல்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், பதிப்பகங்களின் புத்தகங்கள், போட்டித்தேர்வுகளுக்கான புத்த கங்கள், பயணக்கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளில் பல லட்சக் கணக்கான புத்தகங்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன. இந்த திருவிழாவில் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் களின் மாலை நேர நிகழ்ச்சிகள், குழந்தை செயல்பாட்டாளர்கள் - மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடனான கலந்துரை யாடல் நிகழ்ச்சிகள், கருத்தரங்கு கள், கோளரங்கம் உள்ளிட்டவை பார்வையாளர்களை கவர்ந்தது.  மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த புத்தக கண் காட்சியில் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்து பிடித்த மான புத்தகங்களை தேடியெடுத்து  வாங்கி சென்றனர். புத்தக திருவிழாவிற்கான ஏற் பாடுகளை தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா, புத் தக திருவிழா வரவேற்பு குழுச் செயலாளர் மஸ்தான், தலைவர் மணி, துணைத்தலைவர் மருத்து வர் மகேஸ்வரன், பொருளாளர் ராஜாமணி, மாநிலச் செயலாளர் மகபுநிசா உள்ளிட்டோர் செய்திருந் தனர்.