districts

img

சூலூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற பொம்பை கடைக்காரர் கைது: கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

சூலூரில் கஞ்சா சாக்லேட் பதுக்கி வைத்திருந்த பொம்மை  கடைக்காரை கைது செய்த காவல்துறையினர் பதுக்கி வைத்திருந்த ஆறரை கிலோ கஞ்சா சாக்லேட் பாக்கெட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலை அடிப்படையில் அப்பகுதியில் தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த வட மாநில நபர் ஒருவரை பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்னுக்குப் பின் முரணாக அந்த நபர் பதிலளித்துள்ளார் பின்னர் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டபோது அதில் கோல்டன் நிற பேக்கெட் ஒன்று அந்த கைப்பையில் இருந்துள்ளது அந்த கோல்டன் நிற பேக்கேட்டை பிரித்து பார்த்தபோது சாக்லேட் வடிவில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பதும் இங்குள்ள பொம்மை கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது வட மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இப்பகுதியில் உள்ள வட மாநில நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பதுக்கி வைத்திருந்த ஆறரை கிலோ எடையுள்ள 32 கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.