நீலகிரி, ஜூன் 4- நீலகிரியில், இந்தாண்டு கோடை சீசனில் 6¾ லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட் டத்துக்கு ஆண்டுதோறும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 8½ லட்சம் பேர் வந்து சென்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் வரும் 7ஆம் தேதியன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணி கள் வருகை இருந்து கொண்டே உள்ளது. இதில் வெளிமாநிலங் கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 25 ஆயிரம் பேர் உதகைக்கு வருகின்றனர். வார விடுமுறை தினமான ஞாயிறன்று உதகை வந்த சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங் களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும், குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைன் பாரஸ்ட், காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லத்தில், படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகளில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு சவாரி யின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ளகடாமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந் திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசித் தனர். இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திற்கு புதுமண தம்பதிகள் வருகை தந்தனர். கடந்தாண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் படகு இல்லத்தில் சுமார் 5½ லட்சம் பேர் படகு சவாரி செய்த நிலையில், இந்தாண்டு சுமார் 6¾ லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 7ஆம் தேதி யன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள தால், கடைசி ஞாயிறன்று படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையே, அவ்வப்போது மழை பெய்தாலும் சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் ஆர்வ முடன் படகு சவாரி செய்தனர்.