கோவை, ஜூன் 18- உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கமும், கோவை அரசு மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழு சார்பில், துடியலூர் அப்பநாயக் கன்பாளையம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் ரத்ததான முகாம் நடை பெற்றது. இதில், கோவை அரசு மருத்து மனை ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று தகுதியான கொடையாளர்களை கண்டறிந்தனர். இம்முகாமிற்கு, வாலிபர் சங்க ஒன்றி யக்குழு நிர்வாகி ஜி.சிவசங்கர் தலைமை ஏற்றார். கோவை மாவட்ட துணைத் தலைவர் நா.ராஜா துவக்கி வைத்தார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் ரத்ததானம் செய்த வர்களை பாராட்டி கௌரவித்தார். இதில், வாலிபர் சங்க மாநிலப் பொரு ளாளர் எஸ்.பாரதி, மாவட்ட பொருளா ளர் தினேஷ் ராஜா, கோவை மாநகராட்சி 1 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், சிஐ டியு வடக்கு பொதுத்தொழிலாளர்கள் சங்க செயலாளர் கேசவமணி உள் ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி உரை யாற்றினர். முன்னதாக, இந்த ரத்ததான முகா மில் ஏராளமான இளைஞர்கள் பங் கேற்று ரத்ததானம் செய்தனர். முடிவில், 52 யூனிட் ரத்தம் இம்முகாமில் சேகரிக் கப்பட்டது.