districts

img

கோவில் நிலத்தை அரசு பதிவேட்டில் ஏற்றக்கோரி முற்றுகை

நாமக்கல், ஆக.16- அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவிலை அரசு பதிவேட்டில் ஏற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வா ளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியம், இலுப்புலி கிராமம், மாரப் பம்பாளையம் பட்டியலினத் தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் காளியம்மன் கோவில் அமைத்து, கடந்த 20 வருடங்க ளுக்கு மேலாக வழிபட்டு வருகின்ற னர். இதன் அருகாமையில் உள்ள தனிநபர், இக்கோவில் முன்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்ததை யடுத்து, அப்பகுதி பொதுமக்கள் காளியம்மன் கோவிலை அரசு பதி வேட்டில் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்த னர். இந்நிலையில், இக்கோரிக்கை களை வலியுறுத்தி புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்று கையிட்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன் றியச் செயலாளர் கே.எஸ்.வெங்கடாச லம், மாவட்டக்குழு உறுப்பினர் பழனி யம்மாள், மூத்த தோழர் சுந்தரம், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ஈஸ்வ ரன், கிளைச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனி டையே, வருவாய் ஆய்வாளர் அனு ராதா சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஆக.19 ஆம் தேதியன்று இரு தரப்பின ரையும் அழைத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.