districts

img

பிளேடுக்கும் ஜிஎஸ்டி முகச்சவரமும் செய்ய முடியாது

-கோவிந்தராஜ், ஜங்சன்.

ஒன்றிய பாஜக அரசு நாளுக்குநாள் விலைவாசிகளை உயர்த்திவருகின்றன. குறிப்பாக தற்போது நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் குழந்தைகள் பென்சில் சீவ பயன்படுத்தும் சார்ப்பனர் முதல் உயர்த்தியுள்ளது. பாஜக ஆட்சியில் மக்களால் மணியும் (பணம்) சேவ் செய்ய முடியவில்லை, பிளேடு வரை ஜிஎஸ்டி-யை உயர்த்தியுள்ளதால், முகச்சவரமும் செய்ய முடியாது. பாஜக ஆட்சியில் மனிதர்கள் ஆதிவாசி போல் இருக்க வேண்டும் என ஒன்றிய மோடி அரசு நினைக்கிறது. 

-லலிதா, பழைய சூரமங்கலம்.

பாஜக வரி விதிப்பில் இனி பழைய கஞ்சிக்கு தயிர் வாங்க கூட முடியாத நிலைக்கு ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளது. சாதாரன ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் தயிர், மோர், பன்னீர் உள்ளிட்ட பாக்கெட் பொருட்களை வாங்குது இனி எட்டா கனியாக மாறியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டு கேட்ட மோடி இன்று மக்களுக்கு அடிப்படையாக கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பினால் மக்களை மேலும் வஞ்சித்துவிட்டார். எல்இடி பல்பு, கிரைன்டர், குழந்தைகள் பயன்படுத்தும் சாப்னர், பாக்கெட் பொருட்கள் என அனைத்து பொருட்களுக்கும் வரி விதிப்பு விதித்து ஏழை மக்களை வஞ்சித்துவிட்டு தனியார் பெரிய நிறுனங்களுக்கு கடன்களை வாரிவழங்கிவருவது என்ன நியாயம், என்றார்.

-ராணி ஒகேனக்கல்

ஒகேனக்கல் பகுதிக்கு பெரும்பாலும் வரும் சுற்றுலா பயணிகள்  பேக் செய்யப்பட்ட இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிட்டு போறதுதான் பெரும்பாலும் வாடிக்கையாக உள்ளது. சீசன் நேரங்களில் சாதாரணமாகவே விலை கூடுதலா வைக்கும் ஆனா இப்போ மத்திய அரசாங்கம் ஹோட்டல் அறைகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி வரி, மீன், முட்டை கறி என பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ஏற்றினால் சுற்றுலா பயணிகள் அதிகமா செலவு செய்வதை தவிர்த்து விடுவார்கள். இதனால், இதை நம்பி இங்கு வாழ்க்கை நடத்துற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். இங்கு மட்டுமல்ல தொடர்ந்து விலைவாசி சமீபகாலமா அதிகரித்து வருகிறது. இந்த நேரத்துல இப்படி ஜிஎஸ்டி வரி போட்டு உயர்த்துவதால் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும். இங்கு இருக்கிற மக்களினுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் எனவே ஒன்றிய அரசு உடனடியாக உயர்த்தப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும்.

கோவை அடையாளத்தை இழக்கும் 

-பாலச்சந்திரன், கோவை

கிரைண்டர் தயாரிப்பாள ரும், கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் மற்றும் உதிர் பாகங்கள்  தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான பாலச்சந்திரன் கூறுகை யில்,  கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டோம்.  பின்னர் மூலப்பொருள் விலை 50-60 சதவிகிதம் வரை அதிகரித்தது. கடந்த ஒரு சில மாதங்களாக எங்கள் தொழில் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறோம் என்கிற நிலையில் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு எங்களுக்கு பேரிடியாக உள்ளது.  இந்த வரி உயர்வின் மூலமாக ஒரு கிரைண்டர் குறைந்தபட்சம் ரூ.600ல் இருந்து அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும். இதனால் மக்கள் கிரைண்டர்களை வாங்க யோசிப்பார்கள். கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மாவு வாங்கிக்கொள்ள நினைப்பார்கள். இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கோவையின் பாரம்பரியமான தொழிலாக கிரைண்டர் உற்பத்தி தொழில் உள்ளது. இந்தியா வில் 90 சதவீகித கிரைண்டகள் இங்குதான் உற்பத்தியாகிறது. ஏற்கனவே பம்ப்செட், மோட்டார் தயாரிப்பு தொழில்கள் வட இந்தியாவிற்கு போய் விட்ட்டன. இப்படியே சென்றால் கோவை தனது அடையாளத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொகுப்பு- சக்திவேல், எழில், ஜீவானந்தம், கே.எஸ்.எம், தினேஷ், பா.முத்துக்குமார், மு.சக்தி சரவணா