districts

img

அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.26- மோடி அரசினால் தொழிலாளர்க ளின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட  செப்டம்பர் 23 கருப்பு நாளாக அனுச ரித்து அனைத்து தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில், வியாழ னன்று கோவையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 23 இல் மோடி அரசு  நிறைவேற்றிய சட்ட தொகுப்புகளின் காரணமாக பல ஆண்டு காலம் போராடிப் பெற்ற சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.  பெரும் முதலா ளிகளுக்கு ஆதரவான இச்சட்டங் களை திரும்ப பெற வேண்டும். என  வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  கோவை மாவட்டம், மத்திய தபால்  தந்தி அலுவலகம் அருகில் வியாழ னன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, எல்பிஎப். வி.ஆனந்த் நாசர், ஏஐடி யுசி. எம்.ஆறுமுகம், ஐஎன்டியுசி. பாச மலர் சண்முகம், எச்எம்எஸ். டி.எஸ். ராஜாமணி, எம்எல்எப். மூ.தியாகரா ஜன், ஏஐசிசிடியு. ஏ.பாலசுப்பிரமணி யம், எல்டியூசி. ஜெயபிரகாஷ், எஸ்டி டியு. பஷீர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.