பிஎஸ்என்எல் ரீசார்ஜ் சேவை மறுக்கும் எஸ்பிஐ?
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் சேவை மறுக்கும் எஸ்பிஐ? ஈரோடு, ஏப். 11- பிஎஸ்என்எல் ரீசார்ஜ் சேவையை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் வங்கிகள் பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. பாரத ஸ்டேட் வங்கியும் யோனா செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதில் செல்போன்களுக்கும் ரீசார்ஜ் செய்ய முடியும். பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனத்தினர் வழங்கும் செல்போன் சேவைகளுக்கு ரீசார்ஜ் பெறும் சேவை அனுமதிக்கப்பட்டது. இதில் பிஎஸ் என்எல் ரீசார்ஜ் சேவை தடைப்பட்டுள்ளது. சேவை வழங் கும் நிறுவனத்தை தேர்வு செய்க என்னும் பகுதியில் பிஎஸ் என்எல் ஐ தேர்வு செய்ய இயலவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் வாடிக்கையா ளர்கள் கூறுகையில், எஸ்பிஐ யோனா செயலியில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் விஐ மட்டுமே தேர்வாகிறது. ஏற்கனவே ரீசார்ஜ் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து தேர்வு செய்தாலும் ரீசார்ஜ் ஆக சப்மிட் கேட்கும். அதன் பிறகு அதனை உறுதி செய்ய வேண்டும். அப்போது ஒரு கடவுச் சொல் வரும். அதனை உள்ளீடு செய்யும் போதுதான் ரீசார்ஜ் செய்யப்பட்டது என வரும். ஆனால் பிஎஸ்என்எல்க்கு சப்மிட் கேட்கும் பகுதியைத் தாண்டுவதில்லை. தனியார் நிறுவன செல்போனுக்கு ரீ சார்ஜ் செய்ய முடிகிறது. நமது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்எல்எல் நிறுவ னத்தின் செல்போனுக்கு மட்டும் ரீசார்ஜ் செய்ய முடிய வில்லை என குற்றம் சாட்டினார்.
மரக்கடையில் பயங்கர தீ விபத்து
மரக்கடையில் பயங்கர தீ விபத்து சேலம், ஏப்.11- செவ்வாய்பேட்டை அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங் கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு, வேம்பு, சவுக்கு மரங்கள் தீக்கிரையாகின. சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே உள்ள சீதாராம் செட்டி சாலையில் சந்திரசேகர் என்பவர் பல ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இக்கடையில் புதனன்று அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்தவை அனைத்தும் மரங்கள் என்ப தால் தீ வேகமாக பரவியது. இதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் தேக்கு, வேம்பு, சவுக்கு, பட்டாக் மற்றும் பல அரிய வகை மரங்களும் தீக்கிரையா கின. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர். பல மணி நேரம் போராடி தீய ணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இவ்வி பத்து குறித்து செவ்வாய்பேட்டை காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு: அதிமுக முகமூடியில் பாஜக வேட்பாளர்
ஈரோடு, ஏப். 11- தமிழ்நாட்டில் பாஜக ஒருபோ தும் வெற்றி பெறாது என்பதை உணர்ந்து, திடீரென அதிமுகவிற்கு தாவி, ஈரோடு தொகுதியை பெற் றுக்கொண்டு அதிமுக முகமூடியை மாட்டிக்கொண்டு பாஜக வேட்பா ளர் வருவதாக ஈரோடு தொகுதி மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணியின் சார் பில் திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷ் போட்டியிடுகிறார். இவ ரின் வெற்றிக்காக இந்தியா கூட்ட ணியின் அங்கம் வகிக்கும் கட்சி கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வரு கிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகு தியில் திமுக வேட்பாளர் கே.இ.பிர காஷின் வெற்றி உறுதியாகியுள் ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் கோடீஸ்வர ரான ஆற்றல் அசோக்குமார், மக் களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறார். கல்வியாளர் கள் பின்புலத்தில் வந்த ஆற்றல் அசோக்குமார், பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ரூ.500 கோடிக்கு மேல் சொத்துள்ள இவர், கடந்த மாதம் வரையில் பாஜகவின் ஓபிசி பிரிவில் மாநில துணை தலைவராக இருந்தார். பணம் கோடி கோடியாக கொட் டிக் கொண்டிருந்தாலும், அதனை பாதுகாக்க பதவி வேண்டும் என்ப தற்காக தொடர்ந்து முயற்சி மேற் கொண்டு வந்துள்ளார். இதன்கார ணமாகவே, ஆற்றல் என்ற பெய ரில் அறக்கட்டளை நிறுவி நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக ளில் சேவை என்ற பெயரில் பணி களை செய்து வந்தார். இந்நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி இல்லை என்றானவுடன், பாஜக வேட்பாளராகக் களமிறங்கி னால் கனவு நிறைவேறாது என அறிந்து அக்கட்சியலிருந்து விலகி னார். பின்னர், அதிரடியாக அதிமு கவில் தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுகவின் வேட்பா ளராகவும் அறிவிக்கப்பட்டார். ஆனாலும், முழு சந்திரமுகி யாக மாறாமல், சமூக வலை தளப் பக்கங்களில் மோடியைச் சந்தித்து எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந் தார். கட்சி மாறி மாற்றுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய நிலையி லும் அப்படம் அகற்றப்படவில்லை. அதிமுக ஓட்டும் வேணும், பாஜக ஓட்டும் வேணும் என்கிற இவரின் பேராசை குறித்து, இதுகுறித்து தீக்கதிரில் செய்தி வெளியானது. இதனையடுத்து, தனது குட்டு வெளிப்பட்டு விட்டது என உணர்ந்து, அப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்றினார். ஆனாலும், அதிமுக முகமூடி அணிந்து கொண்டு பாஜக வேட்பா ளர் வருகிறார் என்பது போன்ற நகை யாடல்கள் இத்தொகுதி முழுவதும் உலவி வருகிறது. மேலும், பாஜக வின் பீ டீம் ஆக அதிமுக செயல்ப டுவதும், தேர்தலுக்குப் பிறகு இந்த ஸ்டிக்கரை மீண்டும் ஒட்டிக் கொள் வார். மோடியுடன் இருக்கும் புகைப் படத்தை அகற்றினாலும், கள்ளக் கூட்டணி என்பதை புறந்தள்ள முடி யவில்லை. உதாரணமாக அதிமுக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது தாயார் சௌந்தரம் பாஜக வில் ஐக்கியமாகியுள்ளார். அசோக் குமாரின் மாமியார் மொடக்குறிச்சி எம்எல்ஏவாக (சரஸ்வதி) பாஜக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் தான். இவர்கள் இருவரும் சொந்த கட்சியின் கூட்டணிக்கு வாக்கு சேக ரிக்காமல், தங்கள் மகனுக்கும், மரு மகனுக்கும் வாக்கு சேகரித்து வருகின்றனர் என்று கூறப்படு கிறது. எனவே, அதிமுக போர் வையில் வரும் ஆற்றல் அசோக்கு மாருக்கு அளிக்கும் வாக்கு பாஜ கவுக்கான வாக்கு என்பதை ஈரோடு வாக்காளர்கள் உணர்ந்தே உள்ள னர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சேலம், ஏப்.11- வாழப்பாடி அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறிய லில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சந்திரப்பிள்ளை வலசு கிராமம். இக்கிராமத்தில் தொடர் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து போன நிலையில், பொதுமக்களுக்கு ஊராட்சியில் இருந்து சீரான குடிநீர் வழங் கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவதிக்குள்ளான பொதுமக்கள், சீரான குடி நீர் வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், காலிக்கு டங்களுடன் வியாழனன்று பேளூர் – அயோத்தியாப்பட்டணம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகு றித்து தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வா கத்தினர் மற்றும் வாழப்பாடி போலீசார் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப் பட்ட உறுதியின்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலம் பாஜக தலைவர் வீட்டில் சோதனை
சேலம், ஏப்.10- சேலம் குரங்குசாவடி பகுதியி லுள்ள பாஜக மாநகர் மாவட்டத் தலை வர் சுரேஷ் பாபு வீட்டில், வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி நாடா ளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. திமுக, அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட் பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்க ளுக்கு முன்பு திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்கு வாக்கு செலுத்துவதற்காக வாக் காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்ல முயன்ற சுமார் 4 கோடி ரூபாயை அதிகாரிகள் சென்னை யில் பறிமுதல் செய்தனர். இந்நிலை யில், சேலம் குரங்குசாவடி அருகே பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு வீட்டில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரு மான வரித்துறை அதிகாரி கூடுதல் உதவி இயக்குனர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சுரேஷ்பாபு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண் டனர். இச்சோதனையில் பணம் ஏதும் கிடைக்கவில்லை. அப்போது, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வந்திருந்த சூரமங்க லம் உதவி ஆணையர் நிலவழகன் உள்ளிட்ட போலீசார், மீண்டும் சோதனை நடத்த வேண்டும் என தெரி வித்துள்ளனர். அதற்கு அங்கிருந்த பாஜ கவினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
வெறிநாய் கடித்து குழந்தை உட்பட 11 பேர் காயம்
வெறிநாய் கடித்து குழந்தை உட்பட 11 பேர் காயம் நாமக்கல், ஏப்.11- ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில், குழந்தை உட்பட 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம் பாளையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதனன்று காலை 6 மணிக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேரை வெறிநாய்கள் கடித்துள்ளன. அந்த 11 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதனிடையே, கவுண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் வெறிநாய்கள் அதிகம் இருப்பதால், உடனடியாக நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘சர்க்கியூட்’ பேருந்து சேவை துவக்கம்
உதகை, ஏப்.11- உதகையில் உள்ள சுற்றுலாத் தலங் களை கண்டு ரசிப்பதற்காக அரசு போக்கு வரத்துக்கழகம் மூலம் ‘சர்க்கியூட்’ பேருந்து சேவை வரும் 14 ஆம் தேதி யன்று முதல் துவக்கப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பய ணிகளின் வருகை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த நிலை யில், உதகை வரும் சுற்றுலாப் பயணி கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற் றும் ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற் றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அனைத்து சாலைகளி லும் வாகன நெரிசலும் ஏற்படுகிறது. அடுத்த மாதம் கோடை விழா துவங்க வுள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார் பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற் பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் சுற் றுலாப் பயணிகள் வசதிக்காக உதகை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘சர்க் கியூட்’ பேருந்து சேவை வரும் 14 ஆம் தேதியன்று துவக்கப்படுகிறது. இந்த பேருந்து உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்று வரும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சர்க்கியூட் பேருந்துகளில் பெரிய வர்களுக்கு ரூ.100ம் சிறியவர்களுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகி றது. இதில் செல்பவர்களுக்கு டிக்கெட் டிற்கு பதிலாக ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. இந்த பாஸ் வைத்துள்ள பயணிகள் சர்க் கியூட் பேருந்துகளில் குறிப்பிட்டுள்ள சுற் றுலாத் தலங்களுக்கு செல்லாம். கடந்த ஆண்டை போல் இம்முறை யும் தொட்டபெட்டா அருகே உள்ள தேயிலை பூங்கா வரையில் இந்த பேருந் துகள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. துவக்கத்தில் இரு பேருந்துகள் இயக்கப்படும். தொடர்ந்து சுற்றுலாப் பய ணிகள் வருகை அதிகரித்தால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து, சர்க்கியூட் பேருந்தகளின் எண்ணிக்கை யும் அதிகரிக்கப்படும் என போக்குவரத் துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இத னால், உதகை வரும் சுற்றுலாப் பயணி கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசித்து செல்ல முடியும்.
ரம்ஜான் திருநாள்: ஒரே நாளில் 20 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை
ரம்ஜான் திருநாள்: ஒரே நாளில் 20 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை திருப்பூர், ஏப்.11 - ரம்ஜான் தினம் என்றால் பிரியாணியின் சுவை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆசையை தூண்டும். இஸ்லாமிய நண்பர்கள், அண்டை வீட்டார் உள்ளிட்ட பலரும் பிரியாணி விருந்து தருவது வழக் கம். அதேசமயம் இது போன்ற வாய்ப்பு கிடைக்காத பலரும் பிரி யாணி கடைகளில் வாங்கி சாப்பிட்டு திருப்தி அடைகின்றனர். திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன. இங்கு வழக்கமாக விடுமுறை நாட்க ளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து பிரியாணி பார்சல் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் வியாழனன்று இப்பகுதியில் உள்ள பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதி யது. சில பிரபலமான கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நுகர்வோர் பிரியாணி வாங்கிச் சென்றனர். இஸ்லாமியர்கள் மட்டு மின்றி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கடைகளில் திரண்டிருந் தனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து சராசரியாக 5 ஆயிரம் கிலோ அளவில் மட்டுமே பிரியாணி விற்பனை யாகும் என்று கடை விற்பனையாளர்கள் கூறினர். ஆனால் ரம்ஜான் தினமான வியாழனன்று ஒரே நாளில் நான்கு மடங்கு, சுமார் 20 ஆயி ரம் கிலோ பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். பிரியாணியின் சுவையும், மதமாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தரப்பினரும் விருப்பமுடன் இன்றைய தினம் பிரியாணி வாங்கி பகிர்ந்து உண்பதும், மத நல்லிணக்கப் பண்பாட்டின் முக்கிய அம்சம் ஆகும். இந்த இணக்கமான சூழ்நிலை, வெறுப்பை விதைத்த பகுதிகளில் இல்லாத விஷயம். இந்த நல்ல அம்சத்தை பாது காப்போம் என்று இஸ்லாமிய மற்றும் இந்து சமுதாய நண்பர்கள் கூறினர்.
300 நுண் பார்வையாளர்கள் நியமனம்
சேலம் மாவட்டத்தில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக் குச்சாவடிகளைக் கண்காணிக்கும் வகை யில், 300 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நுண் பார்வையாளர்களுக் கான ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர் தல் பொதுப் பார்வையாளர் முன்னிலை யில், மாவட்ட தேர்தல் அலுவலர் ரா. பிருந்தாதேவி தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், மக்களவை தேர் தைலையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங் களில் வாக்குப்பதிவு நடைபெறவுள் ளது. இதில், சேலம் மக்களவை தொகு திக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,766 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இதில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமா னவை என்றும், 14 வாக்குச்சாவடிகள் மிக வும் பதற்றமானவை எனவும் வகைப்படுத் தப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் 82 பதற்ற மான வாக்குச்சாவடிகளும், மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 48 பதற்ற மான வாக்குச்சாவடிகளும் வகைப்படுத் தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழு வதும் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை கண்ட றியப்பட்டுள்ள 250 பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிக ளைக் கண்காணிக்க வங்கி பணியாளர்கள், காப்பீட்டு நிறுவனப் பணியாளர்கள், அஞ் சல் துறை அலுவலர் நிலையிலான 300 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப் பட்ட வாக்குச்சாவடிகளில் இத்தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணிபுரிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியா கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு
இந்தியா கூட்டணிக்கு தேதிமுக ஆதரவு ஈரோடு, ஏப்.11- நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்ட ணிக்கு தேதிமுக ஆதரவு தெரிவித் துள்ளது. இது குறித்து தேசிய திராவிட முன் னேற்றக்கழக நிறுவனர் பிரேம்நாத் கூறுகையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனி சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்தோம். ஆனால், அவர்கள் எங் களை அலட்சியப்படுத்துகிறார்கள். ஈரோட்டில் உள்ள அதிமுக நிர்வாகி கள், வேட்பாளர் ஆகியோர் எங்களை நிராகரித்ததால் அக்கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெற்று திமுக அங் கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளோம். இது தொடர் பாக அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் அளித்துள் ளோம், என்றார்.
டி.எம்.செல்வகணபதி வாக்குசேகரிப்பு
டி.எம்.செல்வகணபதி வாக்குசேகரிப்பு சேலம், ஏப்.11- சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மல்லமூப் பம்பட்டி, மூலக்கடை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகை யில், 10 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந் தும் எதுவும் செய்யாத மோடி, மீண்டும் ஆட் சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறார்? அதி காரத்தை கொடுத்தோம்; பணத்தை (வரியை) கொடுத்தோம். ஆனால், இதுவரை எதுவும் செய் யாத மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வாக்கு சேகரிக்க வந்து கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டை மோடி பிடிக்காத மாநிலமாகவே வைத்துள்ளார். அவருக்கு பிடித்தது எடப் பாடி பழனிசாமி மட்டும்தான். எடப்பாடி பழனி சாமிக்கு பிடித்தவர் மோடி. மோடியின் அடி மையாகவும், பாதம் தாங்கியவருமாக இருந்த வர்தான் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு செல்வகணபதி பேசினார்.