கோவை, ஏப்.18- கோவை பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை கொடுத்து மத ரீதியில் வாக்கு சேக ரித்த பாஜகவினரை தடுத்து நிறுத்தக் கோரி வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந் தது. இந்நிலையில், புதனன்று மாலை கோவை பந்தயசாலை காஸ்மோபாலி டன் கிளப் அருகில் பாஜகவினர் நடைப யிற்சி செல்பவர்களுக்கு தாமரை சின்னத்து டன் கூடிய ராமர் படத்தை வழங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், அங்கு வந்த வழக்கறி ஞர் லோகநாதன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம் பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரி டம் தேர்தல் பிரச்சாரத்தில் மத துஷ்பிரோ கம் செய்யக்கூடாது. கடவுள்களை முன் நிறுத்தகூடாது என்ற விதிமுறை இருக் கும் போது, அனைத்து சமுதாய மக்க ளும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை விநியோ கித்து வருகின்றனர் என புகார் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவினரிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமர் படங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கறிஞர் லோகநாதனிடம் புகார் பெற்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வேக மாக பரவிவருகிறது. இதுகுறித்து அப்ப குதி பொதுமக்கள் கூறுகையில், பத்து வரு டங்களாக ஆட்சியில் இருந்த பாஜக ஒரு சாதனையைக்கூட சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. இவர்களுக்கு பாகிஸ் தான், பங்களாதேஷ், பசுமாடு, ராமர் கோவில் என்பதை தாண்டி வேறு எதுவும் தெரியாது. ஒற்றுமையாக இருக்கும் மக்க ளிடையே வாக்குகளை பெருவதற்காக மத துவேஷசத்தை கிளப்புவதாக குற்றம்சாட்டி னார். மேலும், இதுபோன்ற நபர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.