திருப்பூர், ஜூன் 17- பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அரசு வழங்கிய பட்டா நிலத்தை ஆக்கிர மிப்பு செய்யும் முயற்சியில் பாஜகவினர் ஈடுப டுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். 1996 ஆம் ஆண்டு பாரதிபுரம் பகுதி யில் 735 நபர்களுக்கும், வள்ளுவர் நகர் பகுதி யில் 469 நபர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு பலர் வீடு கட்டி குடியேற தொடங்கினர். 2002 ஆம் ஆண்டில் அரசு குடியேறாதவர்களின் பட்டாக்களை ரத்து செய்வதாக கூறி பாரதிபுரம் பகுதியில் 114 நபர்களுக்கும், வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 81 நபர்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாற்று நபர்களுக்கு 2017 ஆம் ஆண்டில் அதி முக ஆட்சியில் பாரதிபுரம் பகுதியில் 32 நபர்களுக்கும், வள்ளுவர் நகர் பகுதியில் 11 நபர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இந்நி லையில், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டு, ரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு முறை யான தகவல் சென்றடையாதவர்கள் அங்கு குடியேறியதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதிதாக பட்டா வழங்கப் பட்ட 43 நபர்களும் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மாற்று ஏற் பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதையடுத்து பட்டா வழங்கப் பட்ட 43 நபர்களுடன் கூடுதலாக 14 நபர்கள் இணைந்து 2018 ஆம் ஆண்டு திருப்பூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2019 ஆம் தேதி பட்டா வழங்கப்பட்ட 43 பாதிக்கப்பட்ட வர்களுக்கும் நிலம் வழங்க நீதி மன்றம் உத்த ரவிட்டது. ஆனால் அரசு தரப்பில் நடவ டிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் பிஆர்.நடராஜன் மற்றும் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலை வரின் கோரிக்கைக்கு இணங்கி வட்டாட்சியர் பாரதிபுரம் பகுதியிலிருந்த புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்தார். அப்போது பார திய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் சுமார் 85 சென்ட் நிலத்தை கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந் தது தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட அந்த இடத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப் பட்டது. வட்டாட்சியர், நீதிமன்ற உத்தரவில் உள்ள 43 நபர்களை மீண்டும் மனு அளிக்க கூறினர். ஏற்கனவே பட்டா பெற்ற 43 பேரில் 33 நபர்கள் மட்டும் நிலம் வேண்டும் என விண்ணப்பித்தனர். இதைத்தொடர்ந்து 2022 ஜூன் 8 ஆம் தேதி மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பட்டா வழங்குவதாக இருந்தது. பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர் கள் மறு ஆய்வு செய்து பின்பு தான் பட்டா வழங்க வேண்டும் என்று ஆதி திராவிட துறை அமைச்சரிடம் மனு அளித்தனர். இதனால் மீண்டும் பட்டா வழங்குவது கிடப்பில் போடப் பட்டது. இதைத்தொடர்ந்து மே மாதம் 4 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் பாதிக் கப்பட்டவர்களுக்கு சார் ஆட்சியர் பட்டா வழங்கினார்.
இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலம் அடையாளம் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீடு கட்டும் பணிகளை தொடங்கினர். இந்நிலையில் வெள்ளியன்று பாஜக மற்றும் அதிமுகவினரும் சேர்ந்து பாரதிபுரம் பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதிதாக பட்டா வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களை அங்கு அழைத்து சென்று குடியேறும்படி கூறி யுள்ளனர். இதையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை யினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பந் தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா உள்ளவர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த ஊராட்சி மன்ற தலைவர் கணேச னிடம் ரூ.50 ஆயிரம் வாங்கிவிட்டு பட்டா கொடுத் துள்ளீர்கள் என்று பாஜகவை சேர்ந்த செல் வக்குமார், செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டை வைத் துள்ளனர். ரூ.50ஆயிரம் வாங்கியதை நிரூ பிக்கும் படி கூறிய ஊராட்சி மன்ற தலைவரை தாக்க முயன்றுள்ளனர். இதைத் தடுக்க வந்த பொது மக்களையும் தாக்கியுள்ளனர். இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகை யில், பல ஆண்டுக்கால போராட்டத்திற்குப் பின்பு பெறப்பட்ட பட்டாவை எங்களிடமி ருந்து பிடுங்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். நீ எப்படி இங்கு வீடு கட்டி குடியிருப்பாய் என்று நாங்கள் பார்த்து விடுகிறோம் என்று மிரட்டு கின்றனர். நாங்கள் ஊராட்சி தலைவரிடம் எந்தத் தொகையும் தரவில்லை. ஆனால் அவர் கள் பொய்யான குற்றச்சாட்டை கூறி தலை வரை தாக்கினார்கள். ஊராட்சி மன்ற தலைவ ரையே தாக்குபவர்கள் எங்களை என்னவெல் லாம் செய்வார்கள் என்று நாங்கள் பயந்து கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் உள் ளோம். மேலும், இங்கு சகோதரத்துவத்துடன் வாழும் மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இவர்கள் மீது அர சும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.