districts

img

பாஜக, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மோதல் 3 பேர் கைது; 10 பேர் மீது வழக்குபதிவு

தாராபுரம், மே 2 - தாராபுரத்தில் மோதல் சம்பவத்தில்  ஈடுபட்ட பாஜக, இந்து மக்கள் கட்சி நிர் வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளது. திருப்பூர் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் மங்களம் ரவி.  இதேபோன்று, இந்து மக்கள் கட்சி  மாவட்ட தலைவர் ஈஸ்வரன். இந்நிலை யில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து  இருவரின் ஆதரவாளர்களும், சமூக  வலைதளத்தில் மாறி மாறி அவதூறாக  பேசியுள்ளனர். இந்நிலையில், சம்பவத் தன்று இரவு தாரபுரம் பேருந்து நிலை யம் அருகே இரண்டு தரப்பினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். மேலும், அரை நிர்வாணத்தோடு உருட்டு கட்டையால் தாக்கிக் கொண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவ ரத்து நெருக்கடி மிகுந்த பேருந்து நிலை யம் முன்பு இருதரப்பினரும் ஆடைகள்  அவிழ்ந்த நிலையில் தாக்கிக் கொண் டது பொதுமக்களை முகம் சுழிக்க வைத் தது.  இதில், இருதரப்பினரும் காயம டைந்து தாராபுரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக் காக திருப்பூர் மற்றும் கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த சம்பவம் சமூக வலை  தளங்களில் பரவியது. இதையடுத்து தாராபுரம் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குபதிவு செய் தனர். பின்னர் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த குணசேகரன், பாஜகவை சேர்ந்த ரமேஷ்ராம், ராம்ராஜ் ஆகிய 3  பேரை கைது செய்து நீதிபதி முன்பு நேர்  நிறுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 7  பேரை கைது செய்ய போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். சமீப காலமாக தாராபுரம் பகுதியில்  சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள்,  பொது இடங்களில் பொதுமக்களை அச் சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதும்,  ஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்றா லும் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.போலீசார் துரித நடவடிக்கை மேற் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ள னர்.