districts

இஸ்லாமியர்களை அந்நியராக்க பாஜகவினர் முயற்சி

சேலம், ஏப்.6- இஸ்லாமியர்களை அந்நிய ராக்க பாஜகவினர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அமைச்சர்  துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள் ளார். சேலம் மக்களவை தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட் பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, வெள்ளியன்று மாலை ஓமலூர் பேருந்து நிலையம் அருகே  பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற் றது. மத்திய மாவட்ட திமுக செய லாளர் ரா.ராஜேந்திரன் எம்எல்ஏ  தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் திமுக பொதுச்செயலாள ரும், அமைச்சருமான துரைமுரு கன் கலந்துகொண்டு பேசுகை யில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே  மதம், ஒரே கடவுள் என மோடி கூறு கிறார். அப்படி என்றால் சிறுபான் மையினருக்கு இடமில்லை. இந் துக்களுக்கு மட்டுமே இடம் உண்டு  என்கிறார். பல்வேறு நாகரீகம், கலாச்சாரம் கொண்ட நாடு இந் தியா. இதை ஒரே நாடாக்க முயன்று  ஒளரங்கசீப் போன்றோர் தோற்றுப் போய்விட்டனர். ஆங்கிலேயர்கள் துப்பாக்கி முனையில் ஒரே நாடாக மாற்றினார்கள். ஆனால், அகிம்சை முறையில் காந்தி நாட் டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்துவிட் டார். அந்த சுதந்திரத்தை இழக்க  வேண்டும் என்று மோடி சொல்கி றார். உலகில் முதல்முதலாக குட வோலை முறையைக் கொண்டு வந்து ஊர்த் தலைவர்களைத் தேர்ந் தெடுத்தவர்கள் தமிழர்கள். 2 ஆயி ரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே பனை ஓலையில் எழுதி தேர்தல் நடத்தி ஜனநாயக முறையை நாம் பின்பற்றினோம். இந்த நாட் டில் இஸ்லாமியர்கள் அந்நிய நாட் டுக்காரர்கள் இல்லை. சுதந்திரப்  போராட்டத்தில் கலந்துகொண்டு இந்திய மண்ணுக்காக உழைத்த வர்கள். அவா்களை அந்நியராக வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது. காயிதே மில்லத், இஸ்மாயில் போன்றவர்கள் சுதந்திரத்துக்காக உழைத்துள்ளனர். மூவர்ணக்கொ டியை வரைந்து கொடுத்தவரே ஒரு  முஸ்லிம்தான். இந்தத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநா யகம் இருக்காது. சட்டப்பேரவை இருக்காது. இப்போது இருக்கிற ஆளுநர் போன்ற ஒருவர்தான் நம்மை ஆள்வார். இதைத்தான் கொண்டு வர நினைக்கிறாா்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்றாவிட் டால், எதிர்கால சந்ததியினர் நம்மை  மதிக்க மாட்டார்கள். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

வீரபாண்டியில் தீவிர வாக்குசேகரிப்பு

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புத்தூர், உத்தமசோழபுரம், பூலாவரி, வீரபாண்டி, அக்கரபாளையம், பாலம்பட்டி, இனாம்பைரோஜி, சென்னகிரி, எஸ்.பாப்பாரப்பட்டி, மருளையாம்பாளையம், ஆட்டையாம்பட்டி, ராஜாபாளையம், எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர், பெரியசீரகாபாடி, சேனைப்பாளையம், வேம்படிதாளம், ஆணைக்குட்டிப்பட்டி, கல்பாரப்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை, பேரூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.வெண்ணிலா சேகர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.