சேலம், மார்ச் 17- வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாய் ஊருக்குள் காட்டெருமைகள் வருவது அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிரா மங்களை ஒட்டியுள்ள வனப்பகுதி களில் ஆயிரக்கணக்கான காட்டெரு மைகள் வாழ்கின்றன. தற்போது இவ் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் நீர் தேடி காட்டெருமைகள் ஊருக்குள் வரு வது வாடிக்கையாகி விட்டது. ஏற் காடு நாகலூர், முளுவி உள்ளிட்ட கிரா மங்களில், வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேவைக் காக வந்து செல்கிறது. இதனால், அவ் வூர் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காட் டெருமை அச்சத்தால், குழந்தை களை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புவதில்லை என்கின்றனர். இதேபோன்று, கொடைக்கானல் பகுதியிலும், காட்டெருமைகள் கூட் டம் கூட்டமாக ஊருக்குள் வருவது அதிகமாகியுள்ளது. வறட்சி கால மாக இருப்பதால், உணவு, நீர் தேடி வனவிலங்குகள் வருகின்றனர். வனத் துறையினர், வனத்திற்குள் செயற்கை தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப ஏற் பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், முளுவி கிராம சாலையில் உலா வரும் காட்டெரு மையால் பீதியில் உள்ள அக்கிராம மக்களும் இக்கோரிக்கையை விடுத் துள்ளனர்.