கோவை, ஏப்.13- புரட்சியாளர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் எழுச்சியோடு கொண்டாடப்படு கிறது. அரசியல் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் முற் போக்கு ஜனநாயக இயக்கங்கள் சாதியற்ற சமூகத்தை உருவாக்கும் நாளாக கடைபிடிக்கிறது. அரசு அலுவலகங்களில் இந்நாளை சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு, அரசு ஊழியர்கள் உறுதியேற் றனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது நாள் கருத்தரங்கம் வியாழனன்று நடை பெற்றது. கோவை தலைமை தொலைபேசி நிலையத்தில் நடை பெற்ற சிறப்பு கருத்தரங்கத்திற்கு, ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குடியரசு தலைமை ஏற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எஸ்.மகேஸ்வரன் வரவேற்பு ரையாற்றினார். கருத்தரங்கில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாபு ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் யு.கே. சிவஞானம், ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய அமைப்புச் செய லாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், அப்துல் முத்தலிப் நன்றி கூறினார். இந்நிகழ்வில், ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர். து.ஜானகிராமன் அவர்களின் 21 ஆவது நினைவு தினம் கோவை மின் ஊழியர் மத்திய அமைப்பினரால் கடை பிடிக்கப்பட்டது.
கோவை - சிவானந்தா காலனி யில் உள்ள தலைமை பொறி யாளர் அலுவலக முன்பு நடை பெற்ற நிகழ்வில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டல செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். முடிவில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. பழனிச்சாமி நன்றி கூறினார். இதில், திராளன மின் ஊழியர்கள் பங் கேற்றனர். முன்னதாக, டாக்டர் அம்பேத்கர் மற்றும் து.ஜானகி ராமன் ஆகியோரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, நினைவு கூறப்பட்டது. சமத்துவநாள் உறுதியேற்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணல் அம் பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைபிடிப்பதையொட்டி, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்றனர். இதில், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதேபோன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற சமத்துநாள் உறுதிமொழி யேற்பில், அனைத்து அரசு துறை அதிகாரிகளும் சமத்துவ நாள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலை மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை உள்ளிட்ட அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற் றனர்.