districts

img

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தி பூமலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

திருப்பூர், மே 29 - நடுவேலம்பாளையம் சமுதாய நலக்  கூடத்தை சீரமைக்க வலியுறுத்தி பூமலூர்  ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். பல்லடம் ஊராட்சி ஒன்றியம், பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள் ளது. எனினும் சமீப ஆண்டுகளாக ஊராட்சி  மன்ற நிர்வாகத்தால்  பராமரிப்பு பணிகள் எது வும் செய்யாத காரணத்தால் இந்த கட்டடம்  பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இதன் காரணமாக இந்த பகுதி மக்கள்  தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம், அதிக அளவில் செலவு செய்து  தனியார் மண்டபங்களுக்கு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டன. இதன் மூலமாக வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம  ஊராட்சி செயலாளருக்கு இந்த சமுதாய நலக்கூடத்தை உடனடியாக சீரமைத்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வழி காட்டுதல்கள் கொடுத்துள்ளார்.

அதற்கு பின் னரும் ஊராட்சி நிர்வாகம் எந்த பணியும் செய் யாமல் காலம் கடத்தி வருகிறது. இந்நிலையில், நடுவேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் இந்த சமுதாய நலக்  கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி திங்களன்று பள்ளிபாளையத்தில் உள்ள பூமலூர் ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இந்த பிரச்ச னைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை கலைந்து செல்லப் போவதில்லை எனக் கூறி  ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மங்களம் காவல் நிலைய  ஆய்வாளர், ஊராட்சி மன்ற துணைத்  தலைவர், ஊராட்சி மன்றச் செயலாளர் ஆகி யோர் பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக ஊராட்சி மன்றத்தில் இப்பணிக்கான நிர்வாக ஏற்பாடுகளை செய் வதாக உறுதியளிக்கப்பட்டது. இதன்பிறகு முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. உடனே குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகள் துவங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத் தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்த னர்.  இந்த முற்றுகை போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன் றிய செயலாளர் ஆர். பரமசிவம், நடுவேலம் பாளையம் கிளைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.