தமிழக முதல்வர் தலையிட போசியா வலியுறுத்தல்
கோவை தொழில் கூட்டமைப்பு (போசியா)வின் கூட்டம் காஸ்மா பேன் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முக குமார் தலைமையில் நடைபெற் றது. இதில், தொழில் அமைப்புகளின் தலைவர்கள் சுரேந் திரன், சாகுல் ஹமீது, ரவீந்திரன், கிருத்திகா சுரேஷ், பாண்டியன், ரமணன், சங்கரநாராயணன், ஜெயக்குமார், லோகநாதன், அண்ணாமலை, நூர்முகமது உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் மின்சார வாரியத்தின் மூலம் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் மாநி லத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கும். இதனை துறை சார்ந்த அமைச்சரிடமும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடமும் தமிழகம் எங்கும் உள்ள தொழில் துறை சார்ந்த அமைப்புகளும் வர்த்தக அமைப்புகளும் மின் கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும் ஏற்கப்படாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர் வால் தமிழகத்தில் குறு சிறு தொழில்கள் அழிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வர் அவர்கள் தொழில்களை பாதுகாக்க குறு சிறு தொழில் கள் மேல் சுமத்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென்று கோரிக்கையைப் தமிழக முதல்வருக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு கிலோ வாட் முதல் 150 கிலோ வரை மின்சாரத்தை பயன்படுத் தும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்திய நிலை கட்டணம் திரும்பப் பெற வேண்டும். சிறு, குறுந்தொழில் முனைவோர் பயன்படுத்தி வரும் மின் நுகர்வோர்க்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத் தும் மின்சாரத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் கட்டணம் இந்தக் கட்டண உயர்வால் 8% லாபம் கூட இல்லாமல் செயல்படும் ஜாப் ஆர்டர் செய்கின்ற உதிரி பாகங்கள் செய்கின்ற தொழில் முனைவோர்களின் உற்பத்தி கடும் அளவில் பாதிக்கப்படும். பெரும் நிறுவனங்கள் பயன் படுத்தும் மின்சாரத்திற்கு பீக்அவர் இருந்து வரும் சூழ்நிலையில் விண்டுமில் மின்சாரம் மற்றும் தனியார் மின்சார உற்பத்தி துறையிலிருந்து வாங்கி பயன்படுத்தும் வாய்ப்புகள் அவர்களுக்கு உண்டு. எங்களை போன்ற சிறு, கு`று தொழில் முனைவோர் களுக்கு அதுபோன்ற வாய்ப்பு இல்லாத நிலையில் அரசு மேல் கண்ட பிக் அவர் கட்டணத்தையும் திரும்பி பெற்று தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக முதல்வருக்கு அனைத்து தொழில் அமைப்பு களின் சார்பில் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளதாக தெரிவித்தனர்.
கோவை, நவ. 2 - பம்ப்செட் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத் நிறுவனங்கள் தற்போது வார்ப்படம், சாப்ட் பொருட் கள் உற்பத்தியிலும் தற்போது ஆதிக் கம் செலுத்தி வருவதால் கோவை தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். தொழில் நகரான கோவை மாவட் டத்தில், ஜவுளி, பம்ப்செட், கிரைண்டர், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள் ளது. இந்நிலையில், பம்ப்செட்டை தொடர்ந்து பல்வேறு பொருட்கள் உற் பத்தியில் கவனம் செலுத்த தொடங்கி யுள்ள குஜராத் மாநிலத்தால் கோவை தொழில் நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீமா இதுகுறித்து, தென்னிந்திய பொறி யியல் உற்பத்தியாளர்கள் சங்கங் தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறுகை யில், கொரோனா நோய்தொற்று பர வலை தொடர்ந்து ஒன்றரை ஆண்டு களாக நிலவிய மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் மிகுந்த நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. பம்ப்செட் பொருட்களுக்கு தேவையான பெரும் பாலான மூலப்பொருட்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படு கின்றன. கடந்த சில ஆண்டுகளாக குஜ ராத் மாநிலத்தில் பம்ப்செட் தயாரிக் கும் நிறுவனங்கள் அதிகம் செயல்பட தொடங்கியுள்ளன.
இதனால் இந்தியாவின் பம்ப்செட் தேவையில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் முன்பு 65 சதவிகிதம் வரை பங்களித்து வந்தன. தற்போது 45 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது. கோவையில் தயாரிக்கப்படும் பம்ப் செட் பொருட்களின் தரம் சிறப்பாக உள்ள காரணத்தால் சந்தையில் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து தாக்குப்பிடித்து வருகிறது. இருப்பினும் முன்பு கோவை பம்ப்செட் விலையுடன் ஒப்பிடுகையில் குஜராத் பம்ப்செட் விலை 10 சதவீதம் மட்டுமே குறைவாக இருந்தது. தற்போது 20 சதவீதம் குறை வாக உள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வு இதற்கு முக்கிய கார ணமாகும். இதுதவிர கோவையில் வார்படம் தயாரிப்பதற்கு தேவையான மண் ஆந்திராவில் (கூடூர்) இருந்து கோவைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால், குஜராத் மாநிலத்தில சமர்மதி ஆற்று படுகையில் எளிதில் இந்த மண் கிடைத்து விடுகிறது. இதுதவிர ஸ்கிராப் பொருட்களும் அங்கு மிக குறைந்த விலையில் தேவையான அளவு கிடைக்கின்றன. கோவையில் ஒரு கிலோ வார்படம் ரூ.93 வரை விற் பனை செய்யப்படும் நிலையில், குஜ ராத்தில் ரூ. 82-க்கு கிடைக்கிறது. குஜ ராத்தில் இருந்து ஒரு கிலோவுக்கு ரூ.6 வரை போக்குவரத்து செலவு செய்து கொண்டுவந்தாலும் கோவை நிறுவ னங்களுக்கு பயன்தரும். எனவே 2023 முதல் இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவது குறித்து கோவை தொழில் துறையினர் சிந்திக்கவும் செயல்படுத்த தேவையான முயற்சிகளை மேற் கொள்ள தொடங்கியுள்ளனர், என் றார்.
காட்மா
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலை வர் சிவக்குமார் கூறுகையில், எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் வார்படம் முக் கிய மூலப்பொருளாகும்.கோவையில் 600க்கும் மேற்பட்ட வார்பட தொழிற் சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 450 தொழிற்சாலைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவை சேர்ந்தவையாகும். பம்ப்செட் தொழி லில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள குஜராத் மாநிலம் தற் போது வார்படம் தொழிலும் போட்டி யாக உருவெடுத்துள்ளது. வார்படம் மட்டுமின்றி சாப்ட் (shaft) உள்ளிட்ட பல முக்கிய மூலப்பொருட் கள் தயாரிப்பிலும் சிறந்து விளங்கு கிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக கோவை தொழில் நிறுவ னங்கள் குஜராத்துடன் போட்டியிட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். இல்லையெனில் தொழில் வளர்ச்சியில் கோவை மாவட் டம் பின்தங்கும் நிலை ஏற்படும், என் றார்.