districts

img

முத்து செட்டிபாளையத்தில் பகத்சிங் பிறந்த தின விழா

திருப்பூர், செப். 28 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அவிநாசி ஒன்றி யம் முத்து செட்டிபாளையம் கிளை சார்பாக மாவீரன் பகத்சிங் கின் 115 ஆவது பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை கொண் டாடப்பட்டது.  இதில் வாலிபர் சங்கத்தின் கொடியை மாவட்டத் துணைத்  தலைவர் ராம்கி ஏற்றி வைத்தார். அவிநாசி அதிர்வுகள் தப் பாட்ட நிகழ்ச்சியும், சிறுவர்களுக்கான சிலம்பாட்டம் மற்றும்  சான்றிதழ் வழங்கி பாராட்டு விழாவும் நடைபெற்றது.  வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ராம்கி, மாவட்ட துணைச் செயலாளர் வீ.பாலசுப்பிரமணியன், மாண வர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன், வாலி பர் சங்க அவிநாசி ஒன்றியப் பொருளாளர் பழனிச்சாமி, கிளைச் செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.