districts

சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால், நதியில் கலக்கும் கழிவுநீர்!

தருமபுரி, செப்.10- தருமபுரியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறை யாக செயல்படாததால், நகர பகுதி களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே சனத்குமார் நதியில் கலந்து வருகிறதென, அப்பகுதி  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள னர். தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் அதி கமான மக்கள் வசித்து வருகின்ற னர். நகராட்சியில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்க ளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சனத்குமார் நதியின் கால் வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலந்து வந்தது. இதனை தவிர்க்கும்  வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு  ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக் கடை திட்டம் தொடங்கியது. முதற் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீரை சுத்தி கரிக்க ஒருங்கிணைந்த நகரத்தை  ஒட்டியுள்ள மதிகோண்பாளையம் மற் றும் காந்திபாளையத்தில் சுத்திக ரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள் ளது. அதாவது, மதிகோண்பாளை யம் அரூர் பிரிவு சாலையில் பாதாள கழிவுநீர் கால்வாய் திட்ட கழிவுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலை யத்திலிருந்து காந்திபாளையத்தில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு, புதை கால்வாய் வழியாக கழிவு நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திக ரிக்கப்பட்டு அங்கிருந்து சுத்தமான நீரை சனத்குமார் நதியில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், சுத்திகரிப்பு நிலையங் களில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் அப்படியே வெளியேறி வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மழைக்காலங்களில் சேலம் -  தருமபுரி நேதாஜி நெடுஞ்சாலை, நெசவாளர் காலனி பகுதியில் இருந்து அதியமான் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி வரை மழைக் காலங்களில் சாக்கடை கழிவுநீர்  சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்த தண்ணீர் துர்நாற்றத்துடன் சாலை முழுவதும் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிக ளும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இதனால் ஏற்படும் நோய்த்தொற் றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, 19 வார்டுகளிலிருந்து பாதாள சாக்கடை புதை கால்வாய் வழியாக மதிகோண்பாளையம் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலை யத்திற்கு செல்லாமல் சனத்குமார் நதியில் அப்படியே வெளியேறி துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும்,  காந்திபாளையத்தில் உள்ள சுத்திக ரிப்பு நிலையமும் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. ஏற்க னவே அமைக்கப்பட்ட பாதாள சாக் கடை திட்டம் முழுமையாக செயல் படாத நிலையில், மீதமுள்ள 14 வார்டு களிலும் வங்கி கடன் உதவியுடன் பாதாள சாக்கடை திட்டத்தை செயல் படுத்த கடந்த ஆக.29 ஆம் தேதி  நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை புதை கால்வா யில் அவ்வப்போது அடைப்பு ஏற் பட்டு, கழிவுநீர் வெளியேறி, துர்நாற் றத்தால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏற்கனவே 19 வார்டுக ளில் அமைக்கப்பட்ட பாதாள கழிவு நீர் கால்வாய்களை சீரமைத்த பிறகு, மீதமுள்ள வார்டுகளில் பாதாள கழிவு நீர் கால்வாய் திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும். மேலும், கழிவுநீர் சுத் திகரிப்பு நிலையங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என தரும புரி நகர மக்கள் வலியுறுத்தியுள்ள னர்.