இரவில் உலா வரும் கரடிகள் : பொதுமக்கள் அச்சம்
நீலகிரி, டிச.18- கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதுடன், அங்குள்ள கடைகளை உடைத்து சேதப் படுத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று நள்ளிரவில் கோத்தகிரி ஆர்கேசி லைன் பகுதியில் நான்கு கரடி கள் உலா வந்துள்ளது. இந்த காட்சி குடியிருப்பு பகுதிக ளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த வீடியோ வைரலானது. இது அப்பகுதி குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள் ளது. எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி களை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகு திக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கவி அருவியில் வெள்ளம்
கோவை, டிச.18- ஆனைமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதி யில் தொடர் கனமழை காரணமாக ஆழியார் கவியரு வியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை அடுத்த பொள்ளாச்சி வால்பாறை மலைப் பாதையில் அமைந்துள்ளது ஆழியார் கவியருவி. சுற்றுலா தலமாக இருந்து வரும் இந்த அருவிக்கு தமிழ கத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிறன்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், ஆழியார் கவி அருவியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாது காப்பு கருதி கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கோவை, டிச.18- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டு வதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி யில் 18,500 பேர் கலந்துகொண்டனர். கோவையில் இஎல்ஜிஐ எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டு 11-ஆவது பதிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான விழிப்புணர்வு கோவை மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை, வ.உ.சி. மைதானம் அருகே தொடங்கிய மாரத்தான் போட் டியை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல டிஐஜி சரவணசுந்தர், மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியில் 18,500 பேர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டி 21 கி.மீ, 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என மூன்று பிரிவுகளில் நடை பெற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.
வளர்ப்பு யானை தாக்கி முதியவர் பலி
உதகை, டிச.18- முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி முதியவர் ஒரு வர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப் பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் உள்ளன. அங்கிருந்து வளர்ப்பு யானை வில்சனை அதன் பாகன், குடி யிருப்பு பகுதிக்கு அழைத்து வந்தார். அப்போது, எதிரே நடந்து வந்த, யானைப்பாடி கேம் பகுதியைச் சேர்ந்த மாதன் (70) என்பவரை, திடீரென யானை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை வனத் துறையினர் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரி ழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உயிரிழந்த மாதன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர் வருகை குறித்து தெரிவிக்காத தனியார் விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
உதகை, டிச.18- விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற் றுலாப் பயணிகள் குறித்து காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்காத, உதகையைச் சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்கள் மனதில் உடனடியாக உதகை வருகிறது. அதேபோல் ஐரோப்பிய நாட்டின் கால சூழ்நிலை நிலவுவதாலும், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ரயில் இயங்குவதாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இதன்படி, ஆண்டிற்கு சரா சரியாக 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசனில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீல கிரிக்கு வந்தால், குறைந்தது 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தங்கியிருந்து பல்வேறு இடங்களையும் பார்த்து ரசித்து செல் கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கினால் அதுகு றித்து தனியாக பதிவேடுகள் பராமரித்து 24 மணி நேரத்திற்குள் காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதனி டையே, கடந்த வாரம் ஈரான் நாட்டைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த னர். 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங் களை சுற்றி பார்த்த அவர்கள், உதகை - குன்னூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி னர். ஆனால், இதுகுறித்து தங்கும் விடுதி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அப்பக தியில் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், வெளிநாட்டைச் சேர்ந்த வர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து தனியார் விடுதி உரிமையாளர் ரஷீத் மீது காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து தகவல் தெரிவிக்கவிட்டால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் சாலையில் புதிய பாலம் கட்ட கோரிக்கை
ஈரோடு, டிச.18- மேம்பாலம் கட்டப்பட்டும் ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசல் குறை யாத நிலையில், பேருந்து நிலை யத்தை இணைக்க மேட்டூர் சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலையில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்லும் சாலையில் மேம் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் மூலம் அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், பெருந்துறை சாலையில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்பவர்கள் மட்டுமே இந்த பாலத் தில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. பன்னீர்செல்வம் பூங்கா பகு தியில் இருந்து ஈவிஎன் சாலை பகுதி செல்லும் வகையில் பாலம் உள்ளது. அதே நேரம் பெருந்துறை சாலையில் இருந்து ஈவிஎன் சாலைக்கு மேம்பாலம் வழியாக செல்வது சிரமம் என்பதால் தரைவழி சாலையிலேயே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இதனால் அரசு மருத்துவமனை பகுதியில் நெரிசல் சிறிதும் குறை யாமல் தொடா்ந்து கொண்டே இருக்கி றது. வாகன நிறுத்தம் செய்ய ஒரு பெரிய அளவிலான நிழற்குடையாக இந்த பாலம் இருந்து வருகிறது. இரு சக்கர வாகனங்களை நிறுத்தவும், வாடகை கார்கள் நிறுத்தவும், மழை, வெயிலுக்கு மக்கள் ஒதுங்கவும் இந்தப் பாலம் பயன்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டப்பட்டும் போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் பெரும்பாலானவர்கள் இந்த பாலத்தைப் பயன்படுத்துவதில்லை. இதனால் பேருந்து நிலையம் செல்ல மேட்டூர் சாலையில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
காட்டெருமைகளால் மக்கள் அச்சம்
கோவை, டிச.18- வால்பாறை அருகே சாலைகளில் உலா வரும் காட்டெ ருமைகளால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த மாணிக்க எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையோரங்களில், புற்கள் அதிகளவில் இருப்பதால் காட்டெருமைகள் மேய்ச் சலுக்காக உலா வருகின்றன. இந்த காட்டெருமைகளால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் எஸ்டேட் பகுதியிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, காட்டெ ருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
8 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
ஈரோடு, டிச.18- ஈரோடு மாவட்டத்தில் 8 காவல் ஆய்வா ளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மேற்கு மண்டலத்தில் 3 ஆண்டுகள் ஒரே தொகுதி மற்றும் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய 26 காவல் ஆய்வாளர்களை பணியிடம் மாற்றம் செய்து, கோவை மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதில், ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் காவல் ஆய்வாளர் பிரபாகரன், புளியம் பட்டி காவல் ஆய்வாளர் அன்பரசு, கவுந்தப் பாடி காவல் ஆய்வாளர் சுபாஷ் ஆகியோர் சேலம் மாநகருக்கும், ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளர் கோமதி, ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பகத்தின் ஆய்வாளர் நர்மதா தேவி, பவானி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பொன்னம்மாள், சென்னி மலை காவல் ஆய்வாளர் சரவணன் ஆகி யோர் கோவை மாநகருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பணி யிடத்திற்கு, கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜபிரபுவை நியமித்து கோவை சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் உத்தர விட்டுள்ளார்.
தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதாக புகார்
அவிநாசி, டிச.18- அவிநாசி அருகே செம்பியநல்லூர் பகுதியில் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கழிவுநீர் கால்வாய் அமைத்துள்ள தாக ஊராட்சி மன்ற தலைவர் மீது திங்களன்று புகார் அளிக் கப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சியில், சுந்தர மூர்த்திக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. ஊராட்சி நிர் வாகம் சார்பில் 2022 ஆம் ஆண்டில் சுந்தரமூர்த்தி என்பவர் நிலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயன்றுள்ளனர். இத னால் சுந்தரமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் சென்று மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் உத்தரவைப் பெற்று வந் துள்ளார். இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகம், நில அளவை அலுவலர் உள்ளிட்டோர் நிலத்தை அளந்து கொடுத்துள்ள னர். இதன்பின்பு அரசு நிர்வாகம் தரப்பில் ஊராட்சி நிர்வா கத்திற்கு அரசாங்கம் நிலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தனர். இதற்கு மாறாக அரசாங்கத்திலிருந்து எந்தவித நிதியும் ஒதுக்காமல், தனி நபர்கள் மூலமாக நிதி பெற்று சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சாக்கடை கால்வாயை ஊராட்சி மன்ற தலைவர் அமைத்து வருவதாக சுந்தரமூர்த்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி உடனடியாக நிறுத்த வேண்டும், கோரிக்கை மனு அளித் துள்ளார்.
மூடப்பட்ட மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டதால் கருப்புக்கொடி போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தம்
திருப்பூர், டிச.18- திருப்பூர் மாநகராட்சி 22 ஆவது வார்டு டீச்சர்ஸ் காலனி பகுதியில் பெண் கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து இடை யூறாக இருந்த மதுபான கடையை 4 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் போராட் டத்தால் மூடப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் கடை திறக்கப் பட்டுள்ளது. இதைக் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, அங்கேரிபாளையம் சாலை யில் இன்பாண்ட் ஜீசஸ் பள்ளி, பிஸப் பள்ளி, கொங்கு வேளாளர் ஆகிய பள்ளிகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளுக்குச் செல்லும் வழியி லேயே டாஸ்மார்க் கடை எண் 3635 அமைந்திருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ந்து இடை யூறாக இருந்த இந்த மதுபான கடை 4 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்நி லையில் அதே பகுதியில் மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாது காப்பு இல்லாத சூழ்நிலை நிலவு கிறது. அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வரும் வியாழனன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த கடையை மூட உத்தரவிட வேண் டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பில் திருப்பூரில் கருத்தரங்கம்
திருப்பூர், டிச.18- திருப்பூர் மாவட்ட மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் ஞாயிறன்று பிஎஸ்என்எல் திருப்பூர் மத்திய தொலை பேசி நிலைய வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்திந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பி.சௌந்தரபாண்டியன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் கோட்டச் செயலாளர் ஏ.இராஜேந்திரன் வர வேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநிலச் செயலாளர் நிசார் அகமது, பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் ச.செல்லத்துரை, அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் மேற்கு மண்ட லச் செயலாளர் எஸ்.கருணாநிதி, அனைத்திந்திய பி.எஸ்.என்.டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா ளர் தோழர் ஏ.முகமது ஜாபர் ஆகியோர் சிறப்புரையாற் றினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் தோழர் சோ.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயலாளர் பி.அச்சுதன், உடுமலை மின்ப கிர்மான வட்டச் செயலாளர் எம்.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தின் திருப் பூர் மண்டல துணைத் தலைவர் பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்வி.செந்தமிழ்ச் செல் வன் நிறைவுரையாற்றினார். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அமல் படுத்த வேண்டும். தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழி யர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலா ளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண் டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் தோழர் ஜி.சண்முகம் நன்றி கூறி னார். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை செல்வோர் கவனத்திற்கு...
கோவை, டிச.18- வால்பாறையில் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருப் பதால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுலாதளமாக வால்பாறை இருந்து வரு கிறது. இங்கு, வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் சுற்றுலாவுக்காக வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வெயில் அடித்து வந்த சூழலில், தற்போது பனிப்பொழிவு இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வரு கிறது. இதனால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள், மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை சார் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும். மலைப்பாதையில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகளை துன் புறுத்தாமல் பாதுகாப்பாக செல்லுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
விவசாயிகள் சங்க கிளை அமைப்பு
கோவை, டிச.18- பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க கிளை அமைக்கப்பட்டு, நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஜமீன்ஊத்துக்குளி கிளை அமைப்பு கூட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், ஜமீன்ஊத்துக்குளியில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி தலைமை வகித் தார். இக்கூட்டத்தில், ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள பிஏபி வாய்க்கால், 17 ஆம் கிளை 3 ஆம் நம்பர் மடையில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி, கால்வாயை தூர்வார வேண் டும். குடிநீர் வடிகால் வாரிய தண்ணீரால் வாய்க்காலில் புதர் கள் அதிகமாக ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண் டும். ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் பால் சொசைட்டி, கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத் தின் ஜமீன் ஊத்துக்குளி கிளைத் தலைவராக எஸ்.அகத் தீஸ்வரன், செயலாளராக எம்.காந்தி, பொருளாளராக டி. சிவக்குமார், துணைத்தலைவராக எம்.பாலகிருஷ்ணன், துணைச்செயலாளராக ஏ.பாலகங்காதர சிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சாலை ஆக்கிரமிப்பால் இடையூறு வாகன ஓட்டிகள் கடும் அவதி
நாமக்கல், டிச.18- குமாரபாளையம் அருகே சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில், சேலம் – கோவை புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வாக னங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இத னிடையே, கத்தேரி பிரிவு முதல் வட்டமலை சர்வீஸ் சாலை யில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் இப் பகுதியில் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சாலை பணிகள் நடந்து வரும் பகுதியில், ஒரு பக்கமி ருந்து, மறுபக்கத்திற்கு சிறு பாதை இருந்தாலும், அதன் வழி யாக இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று கொண்டுள்ளனர். இதனை தவிர்க்க, இதுபோன்று வேலைக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தும், ஓட்டுநர் உரி மங்களை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி கடைகள் ஏலம் அறிவிப்பு
ஈரோடு, டிச.18- ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காளைமாட்டு சிலை அருகில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளை பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி மூலமாக குத்தகைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இவ்வணிக வளாகத்தில் தரைத்தளத்தில் 161 ச.அடி முதல் 2600 ச.அடி வரையுள்ள 21 கடைகள் உள் ளன. முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் அதேபோல் தலா 12 கடைகள் அமைந்துள்ளன. மூன்றாம் தளத்தில் மூன்று உணவகங்களும், ஓர் சிறுவர் விளையாட்டரங்கமும் உள்ளன. இதனை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலு வலகங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப, கட்டடத்தினை முழு வதுமாகவோ அல்லது ஒவ்வொரு தளமாகவோ தனித்தனி யாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், விவ ரங்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரி வித்துள்ளார்.
வனப்பகுதியில் அதிவிரைவுப்படை போலீசார் அத்துமீறல்
ஈரோடு, டிச.18- ஈரோட்டில் அடர்ந்த வனப்பகுதியில் அதி விரைவு படையினர் ஆமையை சமைத்து சாப்பிட்ட வீடியோ வைரலான நிலையில், சத்தியமங்கலம் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹாடா வனப்பகுதி உள் ளது. தெங்குமரஹாடா மாயற்றை மையமாக கொண்டு பவானிசாகர் வனப்பகுதியில், நீல கிரி வனப்பகுதியும் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீ சார், அதிவிரைவுப் படை போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், ஆமை, முதலைகள் போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று தெங்குமர ஹாடா மாயாற்று அடர்ந்த வனப்பகுதியில் அதிவிரைவு படை போலீசார் சிலர் வனப் பகுதியில் இருந்து ஆமையை எடுத்து வந்து அதை சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஆர்வலர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த னர். இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்து றையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு மாணவிகள் போராட்டம்
கோவை, டிச. 18- கோவையில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை ராஜவீதி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதமாக பள்ளியில் உள்ள கழிவறைகள், சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளியில் உரிய குடிநீர் வசதியும் இல்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தால், டி.சி வாங்கிக் கொண்டு சுத்தமாக இருக்கும் பள்ளிக்குச் சென்று படியுங்கள் என சொன்னதாக மாணவிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்நிலையில், பள்ளியில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தரக்கோரியும், தலைமை ஆசிரியரை கண்டித்தும் பள்ளி மாணவிகள், தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலை மிரட்டல் விடும் பாஜக தலைவர் போலீசில் மூதாட்டி புகார்
சேலம், டிச.18- ஐந்து வருடமாக வீட்டிற்கு வாடகை தராமல், கொலை மிரட்டல் விடும் பாஜக மாவட்டத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூதாட்டி காவல் ஆணையர் அலுவ லகத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாநகரம், ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி யைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (70). இவருக்கு சொந்தமான வீடு ஒன்று சேலம், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ளது. இந்த வீட்டின் கீழ் தளத்தில் பாஜக சேலம் மாநகர மாவட்ட கலை மற்றும் கலாச்சார அணியின் தலைவராக உள்ள ராஜா ராமன் என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டிற்கு வாடகை தராமல், பல்வேறு கார ணங்களை கூறி வந்துள்ளார். இதனால் வீட்டை காலி செய்யு மாறு மூதாட்டி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அதற்கு இந்த வீடு எனக்கு தான் சொந்தம் என்று கூறியும், மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் திகைத்த மூதாட்டி, திங்களன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அப்புகார் மனுவில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட் டுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.