districts

img

அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் தர்ணா

திருப்பூர், ஆக. 30- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அடிப்படை வசதி களை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று ஊத்துக்குளி ஆர்.எஸ் பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்குளி ஆர் எஸ் பகுதி மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊத்துக்குளி ஆர்எஸ் சிபிஎம்  கிளை சார்பில் நடைபெற்ற தர்ணாவில், பேருந்து வசதிகள்  இல்லாதது, மேம்பாலப் பிரச்சனை, மின்விளக்கு பிரச்சனை,  ரேஷன் கடை பிரச்சினை, சாலை வசதி செய்து தரப்பட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா நடை பெற்றது.  ஊத்துக்குளி ஆர்எஸ் கிளையின் ராஜா தலைமை ஏற்றார்.  இதில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, முன்னாள் கட்சி  கிளைச் செயலாளர் வி.கே. பழனிச்சாமி, கட்சியின் மூத்த தோழர் வி.ஏ.நடராஜ், வாலிபர் சங்க ஊத்துக்குளி தாலுகா செயலாளர் பாலமுரளி, தாலுகா குழு உறுப்பினர் ஆர். மணி யன்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார் கள். முடிவில் கட்சி கிளைச் செயலாளர் கே.ஏ.சிவசாமி நன்றி  கூறினார்.