districts

img

நுண்நிதி நிறுவனங்களின் அடாவடி பெண்களுக்கு வங்கியே கடன் வழங்க வலியுறுத்தல்

உதகை, டிச.22- நுண்நிதி நிறுவனங் களின் அடாவடி வசூலை தடுத்திட அரசு வங்கி களில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நேரடி யாக கடன் வழங்க வேண் டும் என அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி வலி யுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக கூடலூரில் அவர் செய் தியாளர்களிடம் கூறுகையில், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் 7 சதவிகித வட் டிக்கு கடன்பெற்று 300க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் 20 முதல் 27 சதவிகி தம் வரை பெண்களிடம் கூடுதல் வட்டிக்கு  கடன் வழங்கி வருகிறது. ஊரடங்கு காலத் தில் வாங்கிய கடனுக்கு வட்டி மற்றும் அசல் செலுத்த முடியாமல் நுண் நிதி நிறுவனங் கள் அடாவடி வசூலில் ஈடுபடுகிறது. இத னால் அரசு வங்கிகளில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நேரடியாக கடன் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்துக்குப் பிறகு கடன் வாங்குபவர்களின் சதவிகிதம் 75  சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், பெண் கல்வி  80 சதவிகிதம் பின் ்நோக்கி சென்றுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு விரல்ரேகை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.  சில சமயங்களில் விரல் ரேகை பதிவாகத தால், பொருட்களும் ஒரே நாளில் கிடைப்ப தில்லை. இதனால் பெண்கள் அலைக்கழிக் கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கருவில் இருப் பது ஆணா? பெண்ணா? என தெரிவிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. இருப்பினும் இச்சட்டம் முறையாக பின்பற்றப்படாத தால் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அடிப்படை விஷயங்களை ஆலோசனை செய்யாமல் பெண்ணின் திரு மண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தி யுள்ளது. இது காதல் மற்றும் சாதி மறுப்பு  திருமணத்தை தடுக்கவே பாஜக அரசு இத் தகைய பிற்போக்குத்தனமான நடவடிக் கையை மேற்கொண்டுள்ளது. இதை திரும் பப் பெற வேண்டும்.  ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பிரசவ மரணத்தை தடுக்க வேண்டும்.

கடந்த ஊர டங்கு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை உள்ளிட்ட காரணங்களால் 7 ஆயி ரம் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட லூர் பகுதியில் 10 ஆயிரம் குடும்பங்கள் மின் இணைப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்பதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என் றார். முன்னதாக, மாதர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் கூடலூரில் மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெயமோள் தலைமையில் நடைபெற் றது. இதில், மாநில பொதுச்செயலளார் பி.சுகந்தி, மாவட்ட தலைவர் லீலா வாசு,  மாவட்ட நிர்வாகிகள் கவுசல்யா, யசோதா,  அமிர்தா குமாரி, ஆதிரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.