கோவை, அக்.3- உயர்க்கல்வி பயிலும் மாண வர்களுக்கு வங்கிகள் உதவ முன் வர வேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள் விடுத் துள்ளார். கோவை மாவட்ட வங்கிகள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி, நாபார்டு வங்கி உள்ளிட்ட வங்கி உயரதிகாரிகள், மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் மற்றும் பல்வேறு வங்கிகளின் உயரதி காரிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் செயல்பாடு கள் மற்றும் பல்வேறு வங்கி கடன் திட்டங்கள் குறித்தும் விவாதிக் கப்பட்டது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசி யதாவது, கல்வியாண்டு துவங்கி உள்ள நிலையில், கல்விக் கடன் தருவதில் வங்கிகள் முன்னுரிமை தர வேண்டும். தமிழகம் சமுக நீதிக்காக தொடர்ந்து இயங்கி வரு கிறது. இதனால், உயர்கல்விக்கு வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. அவர்களின் கல்விப் பயணம் தடையின்றி தொடர வங்கிகள் உதவ முன்வர வேண்டும். சமீபத்தில் பொள்ளாச்சி பகுதி யில் கல்விக் கடன் முகாம் நடை பெற்று உள்ளது. அங்கு விண் ணப்பித்துள்ள மாணவ, மாணவி யருக்கு கல்வி கடன் வழங்குவதில் தாமதமின்றி வங்கிகள் செயல்பட வேண்டும். அடுத்து கோவை மாந கரப் பகுதியில் கல்விக் கடன் முகாம் நடைபெற ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது. அதற்கும் வங்கி கள் தயாராக வேண்டும். கல்வி கடன்களுக்கு விண்ணப் பிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தனியாக சிறப்பு வட்டாட்சியர் ஒருவரை நிய மிக்க நடவடிக்கை எடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட கால கோரிக்கையான கோவை, கரும்புக்கடை பகுதி யில் வங்கி கிளை துவக்க வேண்டும் என பேசினார்.