சேலம், ஜன21- வங்கிகளில் சேவை வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் பழைய பேருந்து நிலையம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தேசிய மற்றும் மாநில வங்கிகளில் சேவை கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர் களிடம் பணப்பறிப்பு நடைபெறுகிறது. வங்கி களில் சேவை வரியை குறைக்க வேண்டும், பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு தள்ளுபடி செய்த பெருந் தொகையை வசூலிக்க ஒன்றிய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி களின் வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வங்கி ஊழியர் கூட்ட மைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.தீனதயாளன், ஏஐபிஇஏ சங்க செய லாளர் எஸ். சம்பத், அதிகாரிகள் சங்க செய லாளர் எஸ்.குணாளன், என்சிபிஇ செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங் கேற்றனர். முன்னதாக, கோரிக்கைகளை வலியு றுத்தி ஜனவரி 30, 31-ஆம் தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் செய்யப்படும் எனவும், தமிழகத்தில் 2 லட்சம் வங்கி பணி யாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற் பார்கள் என கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரி வித்தனர்.