உதகை, ஜூன் 29- மருதமலை வனப்பகுதியில் தாயிட மிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக் கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந் தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மருதமலை யில் கடந்த மே மாதம் 31 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஐந்து நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு தாய் யானை வனப்பகுதிக்குள் கூட்டங்க ளுக்குள் விடப்பட்டது. பின்னர் அந்த தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி ஆண் யானையும் வனத்துறையினர். பராமரித்து வந்த நிலையில், அந்தக் கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத் துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் உள்ள யானைகள் குட்டியை சேர்க்காத நிலை யில், குட்டி யானை மலை கிராம பகுதி யில் சுற்றி திரிந்தது. இந்நிலையில், பிறந்து நான்கு மாதமே ஆன குட்டி யானைக்கு தாய்ப் பால் பிரச்சினை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் பிரச்சினை உள்ள நிலை யில், அதனை முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகா மில் வைத்து பராமரிக்க வனத்துறை யினர் முடிவு செய்தனர். பின்னர் கடந்த 9 ஆம் தேதியன்று கோவையிலிருந்து குட்டி யானை முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது. முதுமலைக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானைக்கு பூஜை செய்த பிறகு கால்நடை மருத்துவர் மற்றும் வனத் துறை உயரதிகாரிகள் முன்பாக மற்ற இரண்டு குட்டி யானைகள் உள்ள அறைக்கு அருகில் உள்ள கரால் கூண் டில் உள்ள அறையில் விடப்பட்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு சத்திய மங்கலத்தில் தாயைப் பிரிந்த ஒரு குட்டி யானை மற்றும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தாயை பிரிந்த குட்டி யானைகள், முதும லையில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், புது குட்டியான வரவால் தாயிடமிருந்த பிரிந்து பராமரிக்கப்பட்டு வரும் குட்டி யானைகளின் எண் ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இந்த குட்டி யானைகளை பராமரிக்க இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் தினந்தோறும் அதன் உடல் தகுதியை ஆய்வு செய்து அந்த யானைக்கு தாய்ப் பாலுக்கு நிகரான லாக்டுஜென், ஊட்டச் சத்து உணவுகள், ஊட்டச்சத்து மருந்து கள், தேவைக்கேற்ப குளுக்கோஸ் நடைப்பயிற்சிகள் போன்றவை வழங் கப்பட்டன. இந்நிலையில், பராமரிக்கப்பட்டு வந்த ஆண் குட்டியானை வெள்ளியன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பக கள இயக் குநர் டி.வெங்கடேஷ் அறிவுரை படி வெள்ளியன்று இரவு உயிரிழந்த ஆண் யானை குட்டியின் உடல் சனியன்று வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் நடுவட்டம் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, பிரேத பரிசோதனையின் முதல் கட்ட ஆய்வில் குட்டியின் குடலில் பெரும்பாலான பகுதிகளில் புண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது, இதன் காரணமாக யானை குட்டியின் உடல் நிலை பலவீனம் அடைந்து இறந்திருக்க லாம் என வனத்துறையினர் தெரிவித்த னர். மேலும், யானை குட்டியின் உள் உறுப்பு பாகங்கள் ஆய்வக பரிசோத னைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலை யில், யானை குட்டியின் உடல் எரியூட் டப்பட்டது. பெரும் எதிர்பார்ப்போடு ஒவ்வொரு நாளும் வனத்துறையினர் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் குட்டியா னையை கண்காணித்து வந்த நிலை யில், சனியன்று இந்த யானை உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.