districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மோட்டார் , வயர்   திருட்டு விவசாயிகள் அச்சம்

பாதுகாப்பு குழு அமைப்பு

கோவை, அக். 23 -  கோவை பேரூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருக்கும் மின் மோட்டார்கள் மற்றும் வயர்கள் தொடர்ந்து திருடு போவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  பேரூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் விவசாயமே பெரும் பிரதான தொழிலாக உள்ளது. கோவை  மாவட்டத்தை பொருத்தவரையில் பெரும்பாலும் மழைப் பொழிவையும், கிணற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனம் மற்றும் போர் அமைத்து தண்ணீர் எடுக்க மின் மோட்டார் அவசியமான ஒன்றாக உள்ளது. இதற்காக, மின் கம்பத்தில் இருந்து நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மோட்டார் வரையில் சுமார்  50 மீட்டருக்கு அதிகமான நீளத்தில் மின் வயர் அமைக் கின்றனர்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப் பட்டுள்ள மோட்டார் வயர்களை சில ஆசாமிகள் திருடி வரு கின்றனர்.  

குறிப்பாக தொண்டாமுத்தூர், தீத்திபாளையம், கரடி மடை, குப்பனூர், மத்திபாளையம், மாதம்பட்டி, காலிக்க நாயக்கன்பாளையம், தேவராயபுரம், நரசிபுரம், இக்கரை போளூவாம்பட்டி, நாதேகவுண்டன்புதூர், சென்னனூர் பகுதி களில் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் உள்ள  மின் மோட்டர்கள், வயர் திருட்டு நடந்துள்ளது. மின்கம்பத்தில்  இருந்து மோட்டார் வரை செல்லும் வயரை வெட்டி சென்று தீயில் கருக்கி அதில் உள்ள செம்புகளை பழைய இரும்பு கடைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் வயர்களை மட்டுமே திருடி வந்தவர்கள் தற்போது மோட்டார், மின்வேலிக்காக அமைக்கப்பட்ட கம்பிகள், பேட்டரி, சோலார் பேனல், சார்க்கர் ஆகியவற்றையும் திருடி  செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கோவை மாவட்ட  காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, விவசாய குறைதீர்ப்பு கூட்டத் திலும், பிரச்சனையை விவசாய சங்கத்தினர் எழுப்பி யுள்ளனர். இரவு நேரங்களில் மட்டுமே திருட்டு நடந்து வரும்  நிலையில், போலீசார் ரோந்து பணிக்கு கூட வருவதில்லை என  விவசாயிகள் அக்கூட்டத்தில் தெரிவித்தனர்.  ஆனாலும், எவ் வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்துள்ளனர். அனைத்து கிராமங் களையும் இணைத்து இந்த பாதுகாப்பு குழுவை உருவாக்கி யுள்ளனர்.

சாலையோரம் வீசப்பட்ட ஆண் சிசு

நாமக்கல், அக்.23 -  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில்  சாலையோரம் முட்செடியில் ஆண் சிசுவை  தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.  ராசிபுரம்- நாமக்கல் சாலையில் உள்ள  அபிராமி கார்டன் பகுதியில் சாலையோரம் முள்செடிகளின் நடுவே பனிக்குடத்தில் தண்ணீருடன் உள்ளவாறு 6 மாத சிசு தூக்கி  வீசப்பட்டுள்ளது. குழந்தை சில மணி நேரத் துக்கு முன்பாக தூக்கி வீசப்பட்டதாக தெரி கிறது. குழந்தை உடலில் ரத்தப்போக்குடன்  ரத்தக்கரை காணப்படுகிறது. இத்தகைய நிலையில் பெண் வயிற்றில் இருந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தால் உயிருக்கு ஆபத்து எனக் கூறப்படுகிறது.  அதிக சக்தி கொண்ட ஊசி செலுத்திய தால் இப்படி தானாக வெளியே வந்திருக் கலாம் என கூறப்படுகிறது. அல்லது அறுவை  சிகிச்சை செய்தவர்கள் யார், எதற்காக  இப்பகுதியில் சாலையோரம் வீசிச்சென்ற னர் என்பது குறித்து காவல்துறையினர் வி்சா ரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல்  துறையினர், மருத்துவத்துறை அதிகாரி கள், ராசிபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு  தகவல் கொடுத்ததன் பேரில் மருத்துவர் சரவணன்குமார் தலைமையில் வந்த குழு  ஆண் சிசுவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.  மேலும், சிசுவை வீசிச் சென்றது குறித்து முழுமையான விசாரணை  நடத்தப்படும் என காவல்துறையினரும்,  மருத்துவர் குழுவினரும் தெரிவித்தனர்.

மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை, அக். 23 -  மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்றபெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வதற்குரிய வசதிகளாக கல்வி, தொழிற்பயிற்சி வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங் களை வகுத்து செயல்படுத்துதல் இதன் நோக்கம் என தெரி விக்கப்பட்டுள்ளது.  அதன்படி கைம்பெண்கள்  மற்றும் ஆதரவற்ற மகளிர்  நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந் தெடுப்பது தொடர்பாக கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண்  விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதி கள் போன்ற நபர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள் ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சி யரக அலுவலக கட்டிடத்தில் விண்ணப்பிக்க அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை நவம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள்  மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்பிக்குமாறு ்கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது.

மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை அமைச்சர் ஆய்வு

ஈரோடு, அக். 23- ஈரோட்டில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை வீட்டு வசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமாரசாமி மருத்து வமனை (பாலாஜி), குயவன் திட்டு, சசி வார்டு, சுப்பிரமணி நகர், ரங்கம்பாளையம், அண்ணா நகர், சேனாதிபதிபா ளையம், சத்யா நகர், சாஸ்திரி நகர், சென்ட்ரல் தியேட்டர் பின்புறம் (ஓடை பள்ளம்) பெரும்பள்ளம் ஓடையில் இருந்து  வெளிவரும் மழைநீர் வீடுகளில் சூழ்ந்துள்ளது. இப்பகுதி களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார்.  அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, நேதாஜி ரோடு, ஆம்ரோஸ் திருமண மண்டபம் மற்றும் அண்ணா நகர் பகுதியில் மகா காளியம்மன் திருக்கோயில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதி கள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான முறையில் வழங்கிடும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.