மேட்டுப்பாளையம், ஆக. 6- விவசாய பயிர்களை அழித்து, விவசாயிகள் உயிர்க ளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் பாகுபலி யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் செவ்வாயன்று மேட்டுப்பா ளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வருகிறது. இது இயல்புக்கு மாறாக அடர் வனத்திற்குள் செல்லாமலும், பிற யானை கூட்டங்களுடன் இணைந்து இடம் மாறாமலும் மேட்டுப்பாளையம் நகரத்தை சுற்றியே வருகிறது. இது விவசாய பயிர்களான வாழை, கரும்பு, பாக்கு, சோளம் போன்றவற்றை உண்டு பழகியதால், தினசரி இரவானால் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர் களை சேதப்படுத்தி வருகிறது. யானையால் தொடர் இழப்பு களை சந்தித்து வரும் விவசாயிகள் ஏற்கனவே பாகுபலி யானையை பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்தொடர்ச்சியாக, பாகுபலி யானையை வனத்துறை யினர் பிடித்து, முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிக் குள் விட வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும். காட்டை விட்டு வன உயிரினங்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசா யிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனி பகுதியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வனச்சரக அலு வலர் ஜோசப் ஸ்டாலினிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். ஏற்கனவே இரண்டு முறை கும்கி யானைகளின் உதவி யோடு பாகுபலி யானையை வனத்துறையினர் பிடிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.