சேலம், பிப்.11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சவுரி யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தோழி கூட்டமைப்பும் இணைந்து சவுரியூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் கொத்தடிமை முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை, 181 காவல் உதவி எண் குறித்து விளக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.ராஜத்தி, ஒன்றிய தலைவர் எம்.கார்த்திகா, செயலா ளர் ஜி.கவிதா, பொருளாளர் பாரதி தானம்மா தோழி கூட்ட மைப்பின் அலமேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.