districts

img

திண்டுக்கல் புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

திண்டுக்கல், அக்.6- திண்டுக்கல்லில் நடைபெறும் புத்தக திருவிழாவையொட்டி இல்லம் தேடி பள்ளி மாணவ, மாணவியர்களிடம் இலக்கியக்களம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா அக்டோபர் 6 அன்று துவங்கியது. இதனை முன்னிட்டு பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இலக்கியக் களத்தின் தலைவர்கள், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், பாலகிருஷ்ணாபுரம் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழாவிற்கு பெற்றோர்களுடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச்சென்று படிக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கலைநிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

;