கோபி, டிச.18- கோபிசெட்டிபாளையத்தில் மின் சிக்கனம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி மின்பகிர்மான வட்டத்தின் சார் பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, மின் சிக்கனம் மற்றும் மின் சேமிப்பு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதி யாக திங்களன்று மின் சிக்கனம் குறித்து நடைபெற்ற விழிப் புணர்வு பேரணியை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மாரியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சீதா திருமண மண்டபத்தில் தொடங்கிய பேரணியானது புதுப்பாளையம், பேருந்து நிலையம், தினசரி சந்தை, கச்சேரி மேடு, ல.கள்ளிப் பட்டி வரை சென்றது. இதில் தனியார் கல்லூரி மாணவ, மாண விகள், மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.