திருப்பூர், நவ.21 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக பெருந்திட்ட வளாகத்தில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பநலச் செயலகம் சார்பாக ஆண் களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழா வினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத் தினை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் திங்களன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரிவித்தாவது, திருப்பூர் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார் பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு விழிப்பு ணர்வு ரதம் துவக்கி வைக்கப்பட் டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங் களில் நகர்வலம் வரும். இதுகுறித்த விளம்பர கையேடுகள் வழங்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா வில் விளக்க கையேடு, முகாம் நடைபெ றும் தேதிகள் அடங்கிய கைபிரதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடை பெற உள்ளன. குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3100 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக் குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) கௌரி திட்டஅலுவலர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு மருத் துவர்கள், திருப்பூர் மாவட்ட குடும்ப நலச்செயலக தகவல் கல்வி தொடர்பு பிரிவு, புள்ளியியல் பிரிவு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண் டனர்.