districts

img

கால்நடைகள் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு

நாமக்கல், ஆக.9- நாமக்கல், சிவியாம்பாளையத்தில் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்திய முன்னணி மருந்து நிறுவனமான மேன்கைண்ட் பார்மாவுடன் இணைந்து, நாமக்கல் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாம், சிவியாம்பாளையத்தில் வெள்ளியன்று நடை பெற்றது. அதில் கால்நடைகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மை குறித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிக ளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து நோய் தடுப் புக்காக கால்நடை உரிமையாளர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. முடிவில், கல்லூரி மாணவி லேகாஸ்ரீ நன்றி கூறினார்.