ஈரோடு, மார்ச் 10- ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் உலக மகளிர் தினம் விழாவில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. “நந்தாவின் கல்கி 2023” என்ற தலைப்பில் விருதுகள் வழங்கும் விழா நந்தா தொழில் நுட்ப வளாக கலையரங்கில் நடைபெற்றது. இக்கல்வி நிலைய அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா ஆயுர் வேதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் முனைவர் எம்.கிருத்திகா வரவேற்றார். வளைய பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ந.கு.தனபாக்கியம் உரையாற்றினார். பின்னர் “நந்தாவின் கல்கி 2023” விருதிற்கு தேர்ந்தெடுக் கப்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புல முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, ஆம்மாச்சி சமையல் புகழ் ஹேமலதா, கல்வித்துறையில் சிறந்து விளங்கும் காசி பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியின் ஆசிரியர் சாந்தா தேவி, விவசாயத்துறையில் சிறந்து விளங்கும் கோபி செட்டிபாளையம் நித்யா ஆகியோர் கலந்து கொண்டு விருது களை பெற்றார்கள். மேலும் கலைத்துறை, சமூக சேவை, சட்டத்துறை, வங்கித் துறை, விளையாட்டுத் துறை, தொழில்துறையினரும் பங் கேற்றார்கள். நந்தா சித்தா மருத்துவகல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் முனைவர் எம்.மேனகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்வில் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்பு துறையின் தலைவர் முனைவர் பி.ரம்யா நன்றி கூறினார்.