குன்னூர் சாலையில் மண் சரிவு
உதகை, டிச.5- குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்ததால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள், குன்னூரில் இருந்து மாற்று வழியான கோத்தகிரி வழியாக அனுப்பி விடப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை யில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற் பட்டது. இதனால், கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்ட போதும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளை யம், கோவை, திருப்பூர், சேலம் போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் குன்னூரிலேயே வரிசை யாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தி வைத்தனர். இந்த வாகனங்கள் கோத்தகிரி வழியாக சென்றால் நேரம் செல வகும், டீசல் செலவாகி விடும். போக்குவரத்து கழகத்திற்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால் போக்குவரத்து சீரான வுடன் வாகனத்தை இந்த வழியிலேயே இயக்கலாம் என பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதாக போக்குவரத்து ஊழி யர்கள் தெரிவித்தனர். இதனால், சுமார் இரண்டு மணி நேரத் திற்கும் மேலாக பயணிகள் வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டனர். இதனால், பயணிகளுக்கும், ஊழியர்க ளுக்கும் பல பேருந்துகளில் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாட்டிய பள்ளியில் சிலைகள் திருட்டு
கோவை, டிச.5- சுந்தராபுரம் அருகே நாட்டிய பள்ளியிலிருந்து 5 சிலை களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி (50). இவர் அதேபகுதியில் ஸ்ரீசரஸ்வதி கலாலயா என்ற நாட்டிய பள்ளியை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பரதநாட்டியம் உட்பட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ ரது நாட்டிய பள்ளியில் இருந்து இரண்டு குத்துவிளக்குகள் காணாமல் போயிருந்தது. இந்நிலையில் அவர் சனியன்று இரவு நாட்டிய பள்ளியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்பின் ஞாயிறன்று நாட்டிய பள்ளிக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, நர்த்தன விநாயகர் மற்றும் யானை சிலை ஆகிய ஐந்து சிலைகள் காணாமல் போயிருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவு உடைக்கப்படாமலும், கதவை திறந்து யாரும் உள்ளே வந்தது போன்ற எந்த விதமான சுவடும் இல்லாமல் இந்த திருட்டு நடை பெற்றதால் நடனப்பள்ளி ஆசிரியர் முரளிக்கு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் அங்கி ருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தமிழர் முகாமில் அமைச்சர் ஆய்வு
அவிநாசி, டிச. 5- அவிநாசி சந்தைப்பேட்டையில் அமைந் துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகா மில், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். இதில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 47 குடும்பங்களில் வசிக்கும் 131 பேர்களுக்கான, அரசு உதவித்தொகை, என்றும் குடியிருப்புகள் சரியான நிலையில் உள்ளதா? என்றும், குடிநீர், மின்சாரம், சாலை கள், கழிப்பிட வசதி போன்றவற்றைப் பற்றி பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் இங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித் தர அரசு ஏற் பாடு செய்துள்ளதாகவும், தாம் அதற்காகத் தான் இங்கு ஆய்வு மேற்கொள்ள வந்திருப்ப தாகவும், அங்கு வசிப்பவர்களிடம் கூறினார். ஆய்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச் சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனையடுத்து, பெருமாநல்லூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகா மிற்கு சென்று அய்வு மேற்கொண்டார்.
மஞ்சூர், துக்கியாம்பாளையம் அரசு பள்ளிகளுக்கு விருது
சேலம், டிச.5- உதகை அருகே உள்ள மஞ்சூர் அரசு தொடக்கப்பள்ளிக்கும், சேலம் அருகே உள்ள துக்கியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளிக்கு மாநில அரசின் சிறந்த பள்ளிக் கான விருது வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிரா மத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் 218 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். வாழப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதேவி தலைமை ஆசிரியையாக வும், மீனா, உமாதேவி, விஜயலட் சுமி, ரேணுகாதேவி, ரவிசங்கர் ஆகி யோர் ஆசிரியர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர். கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்துடன் இணைந்து, பள்ளிக்கு சிறந்த சுற்றுப்புற சூழலை உருவாக்கிய ஆசிரியர்கள், மாணவர் களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பித்து வருகின்றனர். பள்ளி வளா கத்தில் மூலிகைத் தோட்டம், சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சுவர்களில் பாடங் களை கற்பிக்கும் வண்ண ஓவியங் கள், வகுப்பறைகள் தோறும் நவீன தொலைக்காட்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி உள்ளனர். இதுமட்டு மின்றி, கிராமப்புற குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க பயிற்சிகள், வகுப்பறைச் செயல்பாடு மற்றும் கற்பித்தலில் புதிய தகவல் தொழில் நுட்பம், மாணவர்களை கற்க தூண் டும் பாடம் சார்ந்த பொம்மலாட்ட கலை வழி கற்பித்தல் உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடுகளிலும் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். மாவட்ட அளவில் கவனிக்கத் தக்க பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் இப்பள்ளியை ஆய்வு செய்த தொடக்கக் கல்வித்துறை ஆய்வுக் குழுவினர், மாநில அளவில் சிறந்த தொடக்கப்பள்ளியாக தேர்வு செய்த னர். இதையடுத்து சென்னையில் நடைபெற்ற விழாவில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார், தொடக் கக்கல்வி இயக்குநர் அறிவொளி, இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவ லர் இளம்பகவத் ஆகியோர் இப்பள் ளிக்கு சிறந்த தொடக்கப்பள்ளிக் கான விருது வழங்கினர்.
சேலம் வட் டார கல்வி அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, ஆசி ரியை மீனா ஆகியோர் இவ்விருதை பெற்றுக் கொண்டனர். மஞ்சூர் பள்ளியும் தேர்வு இதேபோல் நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயி களின் குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10க்கும் குறைவான மாணவர் களே படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியை ஜெயந்தி மற் றும் பள்ளி ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண் ணிக்கை அதிகரித்து தற்போது இப் பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாண வர்கள் படித்து வருகின்றனர். இந் நிலையில், தமிழக அரசின் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு அறிவிக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். இவ்விருதை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசி ரியை சபீதா, வட்டார கல்வி அலுவ லர் வனிதா ஆகியோர் அமைச்சரிட மிருந்து பெற்றுக்கொண்டனர். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி மற் றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசி ரியர் கழகத்தினர் மற்றும் பொது மக்கள், மின்வாரியத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
கூடுதலாக கிராவல் மண் எடுப்பதா?
ஈரோடு, டிச.5- ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், சலங்கபாளையம் கிரா மத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரபு என்பவர் அனுமதி பெற்று மண் எடுத்து வரு கிறார். ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆழத்தைவிட அதிக ஆழமாக மண் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள் ளது. இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட் டாட்சியரிடம் மனு அளித்தும் எந்த விசாரணையோ, நடவ டிக்கையோ இல்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சட்ட உரிமைகள் கழக அமைப்பாளர் என்.என்.மருதவேல் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இதன்பிறகும் மண் எடுக்க அனுமதி அளித்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புற்று நோயிலிருந்து மீண்டோர் மாராத்தான்
கோவை, டிச.5- புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புற்றுநோயுடன் யாரும் தனியாகப் போராடுவதில்லை எனும் தலைப்பில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் புற்று நோயால் பாதித்து மீண்டோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும், என்பதை பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவையில் தொடர்ந்து 26 ஆம் ஆண்டாக கோவை மாராத் தான் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை, கோவில்பாளையத்திலுள்ள கேஎம்சிஎச் மருத்துவமனை முன்பாக துவங்கிய போட்டியை, கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் மருத்துவர் நல்லா பழனிசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்த னர். 18 கிலோ மீட்டர், ஏழு கிலோ மீட்டர் மற்றும் முதியோர்க ளுக்கான தனி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடை பெற்றது. கோவில்பாளையம் மருத்துவமனையில் துவங்கி கோவை - அவிநாசி சாலையில் மாராத்தான் நிறைவுற்றது. இதில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், மருத்துவதுறையை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாண வர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செயின் பறிப்பு
கோவை, டிச.5- கோவை, மேட்டுப்பா ளையம் அருகே உள்ள பாயப் பனூர் மகாலட்சுமி நகர் பகு தியைச் சேர்ந்தவர் மேரி (75). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த வட மாநில இளைஞர்கள் இருவர், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கலியை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலை யில், மேரியிடம் செயின் பறிப் பில் ஈடுபட்டது மேற்கு வங்கத் தைச் சேர்ந்த மஞ்சருல்சேக் (25), மணிருல்சேக் (22) என் பது தெரியவந்தது. இதைய டுத்து இருவரையும் போலீ சார் கைது செய்தனர்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு
அவிநாசி, டிச. 5- அவிநாசி சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர்களின் வசதி கள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ் தான் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 47 குடும்பங்களில் வசிக்கும் 131 பேர்களுக்கான, அரசு உதவித் தொகை, என்றும் குடியிருப்புகள் சரியான நிலையில் உள்ளதா? என்றும், குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிப்பிட வசதி போன்றவற்றைப் பற்றி பொதுமக்களிடம் கேட்டறிந் தார். மேலும் இங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டித் தர அரசு ஏற்பாடு செய்துள்ள தாகவும், தாம் அதற்காகத்தான் இங்கு ஆய்வு மேற்கொள்ள வந்திருப்பதாகவும், அங்கு வசிப்பவர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பேரூ ராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனையடுத்து, பெருமாநல்லூரில் உள்ள இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்று அய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா
திருப்பூர், டிச. 5 - தமிழகத்தில் நாடகத் தந்தை என்று போற்றப்படும் சங்க ரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா திருப்பூர் மக்கள் மாமன் றத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் மக்கள் மாமன்றம் நிறுவனத் தலைவர் சி.சுப்பிரம ணியம் தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் நாடகவியலா ளர்கள் அ.ராமசாமி, கே.ஏ.குணசேகரன், மு.ராமசாமி, வேலு சரவணன் நாடக நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த அறிமுகத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சி களும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள் அமைக் கப்பட்டு நாடகங்கள் நடத்தப்பட்டதும், அதன் பின்பு நகர மண்ட மைதானத்தில் நாடகங்கள் இடம் பெற்றதும் நினைவு கூரப்பட்டது. கால மாற்றத்தில் நாடகங்களும், அதன் தொடர்ச் சியாக திரைப்பட இயக்கங்களும் மாறி இருப்பதை பற்றி சி சுப்பிரமணியம் விரிவாகப் பேசினார். நாடகங்கள் என்பவை மக்களின் கலை உணர்ச்சிகள். அவை மக்களுக்கு தான் திரும்ப தரப்பட வேண்டும் என் பதை அருணாசலம் குறிப்பிட்டார். பாதல் சர்க்காரின் தமிழக வருகைக்குப் பிறகு திருப்பூரில் நடத்தப்பட்ட நாடகம் முயற்சி களைப் பற்றி சுப்ரபாரதி மணியன் விரிவாக எடுத்துரைத் தார். தங்கராணி என்ற வேலு சரவணன் நாடக நூல் நாடகங்கள் பற்றி மூன்றாம் வகுப்பு படிக்கும் தமிழ் இனியன் விரிவாக பேசினார்.
செங்கப்பள்ளியில் திட்டமிட்ட இடத்தில் பொதுக்கழிப்பிடம்: தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
திருப்பூர், டிச. 5 - செங்கப்பள்ளியில் பேருந்து நிறுத்தம் அருகில் திட்டமிட்ட இடத்தி லேயே பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்க வேண்டும், மக்கள் நலனுக்கு எதிராக திட்டப் பணிகளை தடுப்பவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அப்பகுதி பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்திடம் திங்களன்று செங்கப் பள்ளி பகுதி பொது மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப் பதாவது: ஊத்துக்குளி வட்டம், செங்கப் பள்ளி பேருந்து நிறுத்தம், பிரதான தேசிய நெடுஞ்சாலையில் கோபி - தாராபுரம் சாலை சந்திக்கும் இடத் தில் உள்ளது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மையப் பகுதியாக வும், கோவை - ஈரோடு - சேலம், கோபி - ஊத்துக்குளி - திருப்பூர், வழித்தடத் தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்து பயணிகள் ஏறி இறங்கிச் செல்லும் மையமாக செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தம் உள்ளது. வாரச்சந்தைக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள், மக்களுக்கு முக் கிய மையமாகவும் உள்ளது. மணிக் கணக்கில் பயணம் செய்து செங்கப் பள்ளி வரும் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும், இயற்கை உபா தைகளை கழிக்க ஒரு பொது கழிப் பிடம் இல்லை. ஆகவே செங்கப் பள்ளி பேருந்து நிறுத்த பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் அமைக்க வேண் டும் என செங்கப்பள்ளி ஊராட்சிக் கும், அரசுக்கும் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் நீண்ட கால மாக கோரிக்கை வைத்து வந்துள்ள னர். இதையடுத்து செங்கப்பள்ளி ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத் தம் அருகில் அரசு திட்ட பணியில் நிதி ஒதுக்கீடு பெற்று பொதுக் கழிப்பி டம் கட்டுவதற்கு, கடந்த நவம்பர் 28 அன்று ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கட்டிட ஒப் பந்ததாரர்கள் முன்னிலையில் அஸ் திவாரப் பணிகளை துவக்கி உள்ள னர்.
இப்பணிகளை துவக்கி செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதோடு, திட்டப் பணியை சீர்குலைக்கும் நோக் கில், இயந்திரங்களை வைத்து தோண்டப்பட்ட அஸ்திவாரங்களை அராஜகமான முறையில் மூடி, பணி களை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதனால் பொதுக் கழிப்பிட பணி தற்போது நின்று போய் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பயன்படும் வகையில் ஊராட்சி நிர் வாகத்தால் நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்ட பணியை சிலர் சுயநல நோக்கோடு தடுத்துள்ள செயல் பொதுநலன் விரும்பும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். செங்கப் பள்ளிக்கு வரும் மக்கள் இயற்கை உபாதையைக் கழிக்க அன்றாடம் படும் சிரமத்தை அனைவரும் கவ னத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, மாவட்ட நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் ஏற்கனவே தொடங் கப்பட்ட பொதுக் கழிப்பிடப் பணியை திட்டமிட்ட அடிப்படையில் செங்கப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகி லேயே விரைவில் முடிக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சுயநல நோக்கோடு பொதுக் கழிப்பிட திட்டப் பணியை தடுக்கின்ற எந்த ஒரு நபர் மீதும் சட்டப்படி கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இன்று மின்தடை
திருப்பூர், டிச.5- மூலனூர், கொளத்துப்பா ளையம், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் 6ஆம் தேதி நடை பெறுகிறது. எனவே அன் றைய தினம் காலை 9மணி முதல் பகல் 2மணி வரை அக் கரைப்பாளையம், பொன்னி வாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டு, வெங்கிகல் பட்டி, கருப்பன்வலசு, வடுக பட்டி, போளரை, வலசு, லக்க மநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதுார், கிளாங் குண்டல், அரிக்கான்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தாராபுரம் மின் பகிர்மான வட்ட செயற்பொறி யாளர் பாலன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் 1.5 லட்சம் நோயாளிகள் தரவுகள் திருட்டு?
திருப்பூர், டிச. 5 - திருப்பூரில் உள்ள தனியார் மருத்து வமனை ஒன்றில் இருந்து சுமார் 1.5 லட் சம் நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளி யாகி உள்ளது. இது குறித்து சைபர் கிரைமில் புகார் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை யின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. திருப்பூரில் உள்ள ஸ்ரீ சரண் மருத் துவ மையத்தைச் சேர்ந்த 1.5 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சில ஹேக்கர்கள் திருடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சைபர் கிரைம் தளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் அந்த டேட்டாக்களை விற்பனை செய் யும் முயற்சியிலும் இறங்கி உள்ளதாக வும் கூறப்படுகிறது. இந்த ஹேக்கிங்கை முதலில் கிளவுட்சிக் என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்த மருத்துவ மையத்திற்கும் இந்த ஹேக்கிங்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், மூன்றாம் தரப்பு நபரிடம் இருந்தே தரவுகள் திரு டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 2007 முதல் 2011 வரையிலான நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் தங்களிடம் நோயாளி களின் டேட்டா இருப்பதைக் காட்டச் சிறு தரவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் பொது வெளியிலும் பகிர்ந் துள்ளனர். திருடப்பட்ட தரவுகளில் நோயாளிகளின் பெயர்கள், பிறந்த தேதி கள், முகவரி, பாதுகாவலரின் பெயர்கள் மற்றும் மருத்துவரின் விவரங்கள் உள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மருத்து வர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திரு டப்பட்டது என்பதை கண்டுபிடித்துள் ளது. இந்த ஹேக்கிங் குறித்த உறுதி செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்ட தாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள் ளது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பழனிசாமி கூறுகை யில், எங்களது மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் குறித்த தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள தாக கிளவுட் செக் அமைப்பிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது எத்தனை சதவீதம் உண்மை என்று தெரியவில்லை, ஏனெனில் எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளின் பெயர் மற்றும் முகவரி விபரங்கள் மட் டுமே பெறுவதாகவும், மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளில் பின்பற்று வது போன்ற நடைமுறைகளை இங்கு பின்பற்றுவது இல்லை எனவும் அத னால் எங்களது தரவுகள் வெளியே செல்ல வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த அமைப்பு எங்களிடம் மருத்துவமனையின் தரவு களை ஹேக் செய்ய முடியாத அள விற்கு சாப்ட்வேர் இருப்பதாகவும் அதை வாங்கும் படியும் தெரிவித்துள் ளனர். எனவே அது எங்களுக்கு சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர் பாக சைபர் கிரைமில் புகார் அளித்துள் ளோம். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு வதந்தி மட்டுமே எங்களது மருத்துவ மனையின் எந்த தரவுகளும் ஹேக் செய் யப்படவில்லை என்றார்.
திருப்பூரில் மூடப்பட்ட டாஸ்மாக் பார் சீல் உடைப்பு
திருப்பூர், டிச. 5 - திருப்பூரில், டாஸ்மாக் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பாரை, அத்துமீறி சீலை உடைத்து திறந்து நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில், கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையி லான குழுவினர் மது விலக்கு போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பழைய பேருந்து நிலை யத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண் 1982 உடன் இணைந்து செயல்பட வேண்டிய டாஸ்மாக் பார் அனுமதி வழங்கிய இடத்தில் செயல்படாமல் அருகிலுள்ள கட்டிடத் தில் செயல்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரி கள் விதியை மீறி செயல்பட்டதாக டாஸ்மாக் பாரை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பிறகு அங்கு வந்த நபர்கள் அத்துமீறி சீலை உடைத்து பாரை நடத்த வந்தனர். இத்தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலா ளர் சிவக்கொழுந்து, அரசு வைத்த சீலை அத்துமீறி உடைத்து பாரை நடத்த வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதிகாரிகள் வைத்த சீலை உடைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:46.56/60அடி நீர்வரத்து:793கன அடி வெளியேற்றம்:1015கனஅடி மழையளவு:8மிமீ அமராவதி அணை நீர்மட்டம்: 89.47/90அடி.நீர்வரத்து:830கனஅடி வெளியேற்றம்:767கனஅடிமழையளவு:16மிமீ
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடியில் வீடு உள்ளவர்களுக்கே வீடு ஒதுக்குவதா?
ஈரோடு, டிச.5- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பணிக்கம்பாளை யம் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் வசித்து வரு கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்கள் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். சொந்த வீடில்லாமல் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அரசு இலவச வீட்டு மனையோ, அடுக்குமாடி குடியிருப்போ வழங்கப்பட வில்லை. இந்நிலையில், 8 நபர்களுக்கு அடுக்குமாடி குடியி ருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சொந்த மாக வீடு உள்ளது. அத்துடன் வீடுகள் கட்டி வாடகைக்கும் விட் டுள்ளனர். அவர்களது குடும்ப நபர்கள் அரசு பணியிலும் உள்ளனர். மேலும், அவர்களுக்கு திருவாச்சி கிராமம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வீடு உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளை ரத்து செய்து, வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி பணிக்கம்பாளையம் கிராமத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது
சூலூர், டிச.5- கோவையில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் ஸ்டா லின் திருப்பூர் செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ கைது செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீஸ் எஸ்ஐ உடையணிந்த நபர் வாக னங்களை தடுத்து நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டி ஒருவர் இது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற கருமத்தம்பட்டி போலீசார், புல்லட்டில் போலீஸ் எஸ்ஐ உடையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், அவர் விருதுநகர் மாவட் டம், திம்மன்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது மகன் செல்வம் என்பதும், கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி ஸ்பின் னிங் மில்லில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. போலீஸ் எஸ்ஐ உடையில் புல்லட்டில் கெத்தாக வலம் வருவதுடன், அவ்வப்போது வாகனத் தணிக்கை என்ற பெய ரில் மக்களை ஏமாற்றி வசூல் வேட்டை நடத்தி வந்ததும், தான் காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் வீட்டி லிருந்து போலீஸ் உடையில் கிளம்பி கிளம்பிச் செல்வதும், மில் வேலைக்குச் செல்லும் போது சாதாரண உடையை மாற்றிக் கொள்வதையும் அவர் வாடிக்கையாக வைத்திருந்த தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், போலியாக வாகன தணிக் கைக்கு பயன்படுத்திய புல்லட்டையும் பறிமுதல் செய்தனர். கோவை விமான நிலையத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் திருப்பூருக்கு சாலை மார்க்கமாக சென்ற அதேநாளில், அதே சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வசூலில் ஈடுபட்டி ருந்த போலி எஸ்ஐ ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு ரூ.74 ஆயிரம் கோடியாக அதிகரித்தது!
டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டது
புதுதில்லி, டிச.5- பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்ஐசி முதலீடு செய்திருப்பதாகவும், இந்த முதலீட்டின் மதிப்பு தற்போது ரூ. 74 ஆயி ரத்து 142 கோடியே அதிகரித்து இருப்பதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. எல்ஐசி-யின் இந்த ரூ. 74 ஆயிரம் கோடி முதலீடானது, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதனமான ரூ. 18 லட்சத்து 98 ஆயிரத்தில் 3.9 சதவிகிதம் என்று அந்த செய்தி கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமத்திடமிருந்து, 2020 செப் டம்பர் முதல் 2022 செப்டம்பர் வரையிலான 2 ஆண்டுகளுக்கு உள்ளேயே ரூ.74 ஆயி ரம் கோடி அளவிற்கான பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு, இதுதொடர்பான ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸில், எல்ஐசியின் பங்கு 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந் தது. இது தற்போது 4.02 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதானி டோட்டல் கேஸில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தது, தற் போது 5.77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதேபோல அதானி டிரான்ஸ்மிஷனில், எல்ஐசியின் பங்கு 2.42 சதவிகிதத்தில் இருந்து 3.46 சதவிகிதமாகவும், அதானி கிரீன் எனர்ஜியில், 1 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்து, தற்போது அது 1.15 சதவிகிதமாக வும் அதிகரித்துள்ளது. அதானி போர்ட்ஸில் எல்ஐசி ஹோல்டிங் 9.61 சதவிகிதமாக உள் ளது.
அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களில் மட்டுமே எல்ஐசி-யின் முதலீடு 1 சதவிகிதத்திற்கு கீழ் உள் ளது. அக்டோபர் 31, 2022 நிலவரப்படி, ஈக்விட்டி பண்டுகளின் மொத்த சொத்துகளான ரூ.15.22 லட்சம் கோடியில் வெறும் ரூ. 15 ஆயிரத்து 701 கோடி அல்லது வெறும் 1 சதவிகிதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசியின் முதலீடா னது அதானி குழும நிறுவனங்களில் உள்ள அனைத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களின் பங்குகளின் மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி வாங்கியதால், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 2020 செப்டம்பர் 30 அன்று ரூ. 2.78 லட்சம் கோடியிலிருந்து சுமார் ஏழு மடங்கு அதிகரித்து ரூ. 18 லட்சத்து 98 ஆயிரம் கோடி யாக உயர்ந்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி பங்கு களின் மதிப்பும்10 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல டாடா குழும நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும நிறுவனங்களிலும் எல்ஐசி முதலீடு செய் துள்ளது. டாடா குழுமத்தின் மொத்த சந்தை மூல தனம் ரூ. 21 லட்சத்து 91 ஆயிரம் கோடி யில், எல்ஐசி-யின் முதலீடானது 3.98 சதவிகித மாக உள்ளது. மியூச்சுவல் பண்டுகளில் 4.9 சதவிகிதத்தை எல்ஐசி வைத்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பான ரூ. 18 லட்சத்து 42 ஆயி ரம் கோடியில், 6.45 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்திருக்கிறது. மியூச்சுவல் பண்டு களில் 5.68 சதவிகிதம் அளவிற்கு முதலீடு செய்துள்ளது.
கோத்தகிரி கடைவீதியில் உலாவரும் கரடி
உதகை, டிச. 5- கோத்தகிரி பஜார் பகுதியில் இரவு நேரம் உலாவரும் கரடியின் சிசிடிவி காட்சியால் அப்பகுதி மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதி களில் சமீப காலமாக கரடிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவுத்தேடி தேயிலை தோட்டங்கள், பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகு திக்குள் உலா வருவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கடைவிதி யில் நள்ளிரவில் கரடி ஒன்று உலா வந்துள்ளது. ஏராளமான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கரடி உலா வந்தது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கரடி உலா வந்தது அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால் குடியிருப்பு நிறைந்த பகுதியில் சர்வ சாதாரண மாக உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோத்தகிரி பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி படுகாயம்
கோவை, டிச.5- பொள்ளாச்சியில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் விவசாயி ஒவருர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மகா லிங்கபுரத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (50). விவசாயி யான இவர் இவர் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனை யில் வயிற்றில் குண்டு காயங்ளுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி னர். அதில், மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது அண்ணன் செல்வகுமார் ஆகியோர் துப்பாக்கியால் கண்ணாடி டம்ளரை சுட்டு பயிற்சி எடுத்து கொண்டு இருந்ததாகவும், அப்போது செல்வக்குமார் சுட்ட குண்டு எதிர்பாராத விதமாக மீனாட்சி சுந்தரத்தின் வயிற்றில் பட்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது அண்ணன் செல்வகுமா ரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் தான் ஈடுபட்டார்களாக? அவர் கள் வைத்துள்ள துப்பாக்கி அனுமதி பெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமாக மீனாட்சி சுந்தரம் துப்பாக்கியால் சுடப்பட் டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்துணவுத் திட்டம்: தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்
சென்னை, டிச. 5- சமூக நலன் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநரால் சனிக்கிழமை (டிச. 3) நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் கீழ்காணும் விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்களின் விபரம். ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு, வட்டாரத்தை பொறுத்தவரை ஊராட்சியினை அடிப் படையாகவும், மாநகராட்சி, நகராட்சி களை பொருத்தமட்டில் வார்டுகளை அடிப்படையாகவும் கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தை தேர்வு செய்து அதனை சுற்றி 3 கி.மீ.க்குள் அமைந்துள்ள சத்துணவு மையங்கள் விபரத்தினை புள்ளிவிபரமாகவும், ஊராட்சி ஒன்றியத்திற்கான வரை படத்திலும் பொருத்தி அனுப்பிட அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சத்துணவு மையங்களை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில துணைத் தலை வர் பே.பேயத்தேவன் தமிழகத்தில் 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்க ளில் 1 லட்சத்து 29 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வரு கிறார்கள். தமிழக அரசு தற்போது முடி வெடுத்துள்ளபடி 85 ஆயிரம் பணி யிடங்கள் காலியாகும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் முற்றிலும் ஒழிந்துவிடும். சத்துணவு திட்டம் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும்” என்று கூறினார்.
கிராம உதவியாளர்கள் பணிக்கான தேர்வு
உதகை, டிச.5- நீலகிரி மாவட்டத்தில் 6 கிராம உதவியாளர்கள் பணி யிடங்களுக்கான தேர்வில் 117 நபர் கள் தேர்வு எழுதவில்லை. நீலகிரி மாவட்ட வரு வாய்த் துறையின் சார்பில் உதகை வட்டத்தில் 4 நபர் கள், கோத்தகிரியில் 1, பந்தலூரில்1என 3 வட்டங் களில், 6 கிராம உதவியா ளர் பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட வட்டாட்சி யர்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு மூன்று மையங்களில் நடந்தது. உதகை ரெக்ஸ் பள்ளி மையத்தில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.