அவிநாசி, மே 21- மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அவிநாசி அருகே சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் சனியன்று நடை பெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுத் துறைகளை தனியார் மயமாக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டம் மற்றும் மின்சார விநியோக சட்ட திருத்தம் - 2022 திரும்பப் பெற வேண்டும். அரசு பொதுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதி யத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தமிழ் நாட்டில் ஏழு முனைகளில் இருந்து நடை பயண பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் கருவலூர் கிளை சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்த இயக்கத்திற்கு, அருண் தலைமை ஏற்றார். சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சிஐடியு அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழனிச் சாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகேஷ், கருவலூர் மூத்த நிர்வாகி ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.