அவிநாசி, பிப்.9- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் அலட்சியத்து டன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள னர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு முடிந்து சில தினங்களே ஆகியுள்ளது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை தை அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தி தரவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்தி றனாளிகளுக்கு சாமி கும்பிட ஏதுவாக தனி வரிசை, குடிநீர் போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை கோவில் நிர்வா கம் கண்டுகொள்ளவில்லை, பந்தல் மட்டும் அமைத்ததாக கூறப்படுகிறது. நல்லது நண்பர் அறக்கட்டளை உட்பட சமூக தன்னார்வ லர் அமைப்புகள் சார்பில் அன்னதான குழு அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதுபோன்று அலட்சியமாக செயல்படாமல், கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.