districts

img

அவிநாசி கந்துவட்டி குற்றவாளிகள் கைது: பரிமளா உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்

அவிநாசி, மே 25 - அவிநாசி அருகே சுகாதாரப் பணியாளர் பரிமளா  கந்து வட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவத்தில் தொடர்பு டைய குற்றவாளிகள் கைது செய் யப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அவிநாசி அருகே ராயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி.  இவரது மனைவி பரி மளா (30). அவிநாசி பேரூராட்சி யில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் ்களுக்கு சுதேசி என்ற மகனும், தேவ தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சந்திரன் அதே பகு தியை சேர்ந்த தனசேகர் என்பவ ரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்  ரூ.27 ஆயிரம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். வாராந்தோறும் கந்து வட்டி பணம் செலுத்தி வந்துள் ளார். வாங்கிய கடனில் 10 ஆயிரம் ரூபாயும் செலுத்தியுள்ளார். இருப் பினும் தனசேகரன், மீதி ரூ.17 ஆயி ரத்தை உடனே தர வேண்டும் எனக் கூறி தகாத வார்த்தைகளால் பேசி கடந்த சில நாள்களாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள் ளார்.

இந்நிலையில், திங்களன்று சந்திரன் வீட்டில் இல்லாதபோது அங்கு வந்த தனசேகர் மற்றும் அவரது தாயார் பூவாத்தாள் ஆகி யோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்த பரிமளாவை சாதி பெயரை சொல்லி, தகாத வார்த்தைகளில் திட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த பரிமளா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத் தில் கந்துவட்டி கொடுமையுடன், சாதி ரீதியாக வன்கொடுமை குற்றம் செய்த தனசேகர், பூவாத்தாள் இரு வரையும் கைது செய்ய வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன் னணி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித் தமிழர் ஜனநாயகப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பின ரும், பரிமளாவின் உறவினர்களும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும், அவிநாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை பரிமளாவின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. இதன் பின், அவரது உடலை உறவினர் களிடம் ஒப்படைக்க முன்வந்த போது, குற்றவாளிகள் இருவரை யும் கைது செய்ய வேண்டும். வன் கொடுமை தடுப்பு சட்டப்படி இழப் பீடு வழங்க வேண்டும். பரிமளா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறை வேற்றினால் தான் சடலத்தைப் பெற்றுக் கொள்வோம் என போராட் டத்தில் ஈடுபட்டோரும், உறவினர்க ளும் தெரிவித்தனர்.

இச்சூழலில், தனசேகரை காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர். ஆனால், பூவாத்தாள் கைது செய்யப்படாத நிலையில், சடலத்தையும் பெற் றுக் கொள்ள உறவினர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து பரிமளா வின் சடலம் இரவு திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக் கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது. இதற் கிடையே புதன்கிழமை காலை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலா ளர் யு.கே.சிவஞானம், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு வந்து  பரிமளாவின் உற வினர்களைச் சந்தித்து விசாரித்து, ஆறுதல் கூறினர். மேலும், பரிமாளத்திற்கு நீதி  கேட்டும் கோரிக்கைகளை முன் வைத்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதி தமிழர் பேரவை  உள்ளிட்ட பல்வேறு அமைப் ்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன்தொடர்ச்சியாக திருப் பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரை தீண்டாமை ஒழிப்பு  முன்னணி, ஆதி தமிழர் பேரவை  உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து, புதன்கிழமை பூவாத்தாளை காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விபரத்தைத் தெரிவித்து, உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உரிய நிர் வாக நடைமுறைகளைத் தொடங்கி விட்டதாகவும், எனவே, சடலத்தைப் பெற்றுக் கொள்ளும்படியும் கூறி னார். இதையடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா ளர் ச.நந்தகோபால், துணைச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், ஆதித்தமிழர் பேரவை விடுதலைச் செல்வன் உள்ளிட்டோர் முன்னி லையில் பரிமளாவின் உறவினர் கள் புதன்கிழமை மாலை பரிமளா வின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட னர். பின்னர், அவிநாசிக்கு கொண்டு சென்று அங்குள்ள மின் மயானத் தில் உடல் தகனம் செய்யப்பட்டது.