districts

img

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம்

மேட்டுப்பாளையம், ஜூலை 28- கட்டுமானத் தொழிலாளர் நலவாரி யத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க  வேண்டும் என ஏஐடியுசி கட்டிடத் தொழி லாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) அமைப்பு நிலை சிறப்பு மாநாடு, மேட்டுப்பாளையம் -  அன்னூர் சாலையில் உள்ள தனியார்  மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு, சங்கத்தின் தலை வர் ரவி தலைமை வகித்தார். இம்மாநாட் டில், வரம்பற்ற வெளிமாநில தொழிலா ளர்களின் வருகை காரணமாக, உள்ளூர்  தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு முற்றிலுமாக வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமானத் தொழில்களில் 80 சதவிகி தம் வேலைகளை உள்ளூர் தொழிலா ளர்களுக்கு ஒதுக்கி, உத்தரவாதம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.  கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். ஒன்றிய மோடி அரசு கடந்த  ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற ஜனநா யக முறைகளுக்கு விரோதமான முறை யில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், வால் பாறை சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் ஆறுமுகம், சிபிஐ மேட்டுப்பாளை யம் நகரச் செயலாளர் ராமதாஸ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.