districts

img

ரேபிடோ பைக் டேக்சியை தடை செய்திடுக ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, மார்ச் 18- ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கும் கார்ப்பரேட் நிறு வனங்களின் ரேபிடோ பைக் டேக்சியை தடை  செய்ய வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் புகார் அளித்தனர். அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டு  குழு தலைவர் இரா.செல்வம் தலைமையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க தலை வர்கள் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, கோவை மாநகரில் 13 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி  வருகிறது. இதன் வருவாயை கொண்டே  ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறது. ஏற்க னவே, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சாலை பாதுகாப்பு மசோதாவின் விளை வாக பொது போக்குவரத்து நாசம் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், ரேபிடோ என்னும் கார்ப்பரேட் கம்பெனி தனியார் வாக னங்களான டூவீலரை வாடகை உபயோ கத்திக்கு பயன்படுத்துகிறது.

இத்தகைய செயல் மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றம் என தெரிந்தும் ரேபிடோ நிறுவனம் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்க ளும், கல்லூரி மாணவர்களும்  ரேபி டோவை தொழிலாக கருதி தங்களது சொந்த வாகனத்தில் வாடகை எடுத்து வருகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறிக்கு படிந்த இளைஞர்கள் இரையாகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டு நர்களுக்கும், டூவீலர் வாடகை எடுப்ப வர்களுக்கும் இடையே மாநகரம் முழு வதும் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படுகிறது. இச்சூழ்நிலையில், ஆட்டோ தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  எனவே, கோவை மாவட்டத்தில் ரேபிடோ பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  மாநகர காவல் ஆணைய ரிடம் புகார் மனு அளிக்கையில், அனைத்து  ஆட்டோ தொழிற்சங்க கூட்டு கமிட்டி செயலாளர் ப.வணங்காமுடி, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செ யலாளர் எம்.கே.முத்துக்குமார், ஏடிபி சங்க எஸ்.ஜே.அசோக்குமார், எப்ஐடியு சங்க கே.இஸ்மாயில், எஸ்டிடியு சங்க பஷீர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாழ்வா தாரத்தை பறிக்கும் செயலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.