சோழ மண்டலம் நிறுவனத்தில் என்ஓசி பெறுவதில் சிக்கல்
ஈரோடு சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (சோழா) நிறுவனத்தில் இரு சக்கர வாகன கடன் பெற்றவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகு வழங்கப்படும் என்ஓசி பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (சோழா) முருகப்பா குழுமத்தில், வாகன நிதி, வீட்டுக் கடன், வீட்டுப் பங்குக் கடன், SME கடன்கள், முதலீட்டு ஆலோசனைச் சேவைகள், பங்குத் தரகு மற்றும் பல்வேறு நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 86,703 கோடி ரூபாய்க்கு மேல் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளுடன் இந்தியா முழுவதும் உள்ள 1148 கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிளையில் வாகன கடனை திருப்பி செலுத்திய பிறகு வழங்கப்படும் என்ஓசி கொடுப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது. அவர்கள் கொடுக்க வேண்டிய சான்றிதலுக்கு பதி லாக சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறோம் என கூறுகிறார்கள். ஆனால் ஆர்டிஓ அலுவலகம் சென்றால் மிகச்சிறிய நிதி நிறுவனங்களே என்ஓசி கொடுக்கும் போது இந்த நிறுவனம் ஏன் வழங்க மறுக்கிறது. இமெயில் அனுப்ப வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி எழுப்பி அலைகழிக்கிறார்கள். அங்கிருந்து நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால் அப்பகுதியில் இருக்கும் தரகர்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் ஏராளமான வாடிக்கை யாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் புகார்
கோவை, நவ. 3 - ஊரடங்கு காலத்தில் நிதி நிறுவ னத்தின் தவனை காலத்தை அதி கரித்தும், இக்காலத்திற்கு அப ராதம் வசூலிக்க கூடாது என அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இந்துஜா பைனான்ஸ் நிறுவனம் அரசின் உத்தரவை மதிக்காமல் அநியாய அபராதம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலை வர் இரா.செல்வம், பொதுச்செய லாளர் எம்.முத்துக்குமார் தலை மையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, கோவையில் இந்துஜா லைலேண்டு என்ற தனியார் நிறு வனம் ஆட்டோகளுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஆர்.பிரவீன் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் TN 66 AC 9259 என்ற அபே சிட்டி ஆட்டோவிற்கு கடன் பெற்றார். மாதத்தவனையாக ரூ. 5850 வீதம் 48 மாதங்கள் கட்ட வேண்டும் என்ற நிலையில் 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் வரை மாததவணையை சரியாக செலுத்தி வந்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருதொற் றின் காரணமாக ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாதத்தவணை செலுத்தவில்லை. அதற்கான மாதத்தவணையை லோன் முடியும் பொழுது கடைசியில் சேர்த்து கட்டினால் போதும் என்று ஒன்றிய அரசு அப்போது அறிவித்திருந்து. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் மாதம் லோன் முடித்து கொடுக்கும்படி மேற்படி நிறுவ னத்தை அணுகிய பொழுது கொரோனா கால தவணை தொகை செலுத்தாத 5 மாதத்திற்கும் மாதம் ஒன்றுக்கு ரூபாய். 10,300 /- அபராதமாக கட்ட வேண்டும் என்கிறார்கள். ஐந்து மாதத்திற்கு ரூ. 51,500 /- அபராதமாக கட்ட வேண்டும். இல்லையேல் என்ஓசி வழங்க முடியது என்றும் ஆட்டோக் களை பறிமுதல் செய்வோம் என்றும்மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதை போல கோவையில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களிடம் அபராத மாக மாதம் ரூ.10,000 /- வீதம் கோடி கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து வருகிறார்கள். அபராதத் தொகையை குறைக்க சொன்னால் அந்நிறுவனத்தின் மேலாளர் வெங்கடேசன் என்பவர் ஆட்டோ ஓட்டுநர்களை தரக் குறைவாக திட்டுவது, குண்டர் களை வைத்து மிரட்டியும் வரு கிறார். ஆகவே இப்பிரச்சனையில் ஆட்சியர் தலையிட்டு வெங்க டேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கொள்ளை கும்பல்களிடமிருந்து ஆட்டோ ஓட்டுநர்களை பாதுகாக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி யுள்ளனர்.