நாமக்கல், அக்.14- நகர்மன்ற தலைவர் குறித்து சமூக வலைதளத் தில் அவதூறு கருத்துக்கள் பதிவிட்ட ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகர மன்ற தலைவராக மோ. செல்வராஜ் உள்ளார். இந் நிலையில், நகர் மன்ற தலைவர் குறித்து பள்ளி பாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபால் என்பவர் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவேற்றம் செய்து வந் தார். இதுகுறித்து, நகர் மன்ற தலைவர் மோ. செல்வராஜ், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படை யில், ஆட்டோ ஓட்டுநர் கோபாலை போலீ சார் கைது செய்தனர். பின்னர், குமார பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி சிறையில் அடைக்கப் பட்டார்.