districts

img

மக்கள் புழக்கத்தில் உள்ள நிலத்தை ஏலம் விடுவதா?

கோவை, ஏப்.21- பொள்ளாச்சி தாலுகா,  கூழநாயக்கன்பட்டியில் 60 ஏக்கர் நிலம் மக்கள்  புழக் கத்தில் இருப்பதை இந்து அறநிலையத்துறை ஏலம் விட அறிவிப்பு செய்ததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி தாலுகா, கூழநாயக்கன் பட்டியில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான  கோவிலுக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர்  நிலத்தில்,  29 குடும்பங்கள் சேர்ந்தவர்கள்  விவசாயம் செய்து வருகின்றனர். கோவி லுக்கு பூஜைகள் திருவிழாக்கள் மற்றும் சீரமைப்பு பணிகள் ஆகியவை செய்தும் வருகின்றனர்.  இந்நிலையில், அறநிலையத்துறை தக்கார் நியமனம் செய்து பொது ஏலம் விட  அறிவிப்பு செய்ய பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும், பயனா ளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  இதில், பாதிக் கப்பட்ட விவசாயிகள் மற்றும் குடும்பத்தார் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற் றனர்.  முன்னதாக, இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு குணசேகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோமங் கலம் கிளை செயலாளர்  பாலகுருசாமி  ஒருங் கிணைத்தார், இதில், தவிச மாவட்ட செய லாளர் வி.ஆர்.பழனிசாமி, விதொச  தாலுகா செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் மற்றும் சமூக தலைவர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினர்.