ஈரோடு, மே 23- ஈரோட்டில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 59 வாகனங்கள் மே 28 இல் ஏலம் விடப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம் மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக் கான பொது ஏலம் ஆனைக்கல் பாளை யத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில் வருகிற 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும், வாக னங்களை வருகிற 27 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் 27 மற்றும் 28 ஆம் தேதிக ளில் பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாக னத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதை யும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி, அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்க ளுக்கு ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அம லாக்கப்பிரிவு காவல்துறை துணை கண் காணிப்பாளர் அலுவலகத்தினை அணு கலாம்.